மீனவர்கள் வலையில் ராக்கெட் வெடிகுண்டு: போலீஸ் விசாரணை!

வெடிகுண்டு
வெடிகுண்டு

புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் 2 நாட்களுக்கு முன்பாக கடலில் மீன் பிடிக்க பைபர் படகில் சென்றுத் திரும்பிய பிறகு, மீன் வலையை கடற்கரையில் போட்டு விட்டு சென்றனர்.

நேற்று மதியம் அந்த மீனவர்கள் கடற்கரையில் தாங்கள் விட்டுச் சென்ற மீன் வலையை எடுக்கச் சென்றபோது, அதில் ராக்கெட் வெடிகுண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல்படை போலீசார், அந்த ராக்கெட் வெடிகுண்டைக் கைப்பற்றி ஜாக்கிரதையாக அங்கிருந்து அப்புறப்படுத்தி,  மணல் மூட்டைகளுக்கு நடுவே வைத்துக் கொண்டு சென்றனர்.

இந்த ராக்கெட் வெடிகுண்டு மீனவர்கள் வலையில் கிடைக்கப் பெற்றது எப்படி என்பது குறித்து கடலோர காவல் படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com