பூட்டிய காருக்குள் இருந்த ஆண் சடலம்!
சென்னை வளசரவாக்கம் பகுதியில் பூட்டப்படாமல் இருந்த காருக்குள் 50 வயது மதிக்கதக்க ஆண் சடலம் இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வளசரவாக்கம் பகுதியில் உள்ள கனகதாரா நகர் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஷேர் மார்க்கெட் வியாபாரியான டி.அரவிந்த் ( 42). இவர் கடந்த திங்கள்கிழமை காலை தனது காரை வீட்டின் அருகில் பார்க் செய்துவிட்டு லாக் செய்யாமல் சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை மீண்டும் காரை எடுக்க சென்ற அரவிந்த்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. லாக் செய்யாமல் இருந்த காரில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பின்பக்க சீட்டில் படுத்துக்கொண்டிருந்தார், அவர் மீது மதுபோதையின் நாற்றமும் போதை பொருட்கள் பயன்படுத்திய பாக்கெட்டுகளும் அருகில் இருந்தது. இது தொடர்பாக காவல் துறை உதவி எண் 100 அழைத்து தகவல் சொல்லியிருக்கிறார் அரவிந்த். அப்போது, அவ்வழியாக ரோந்து போலீசார் அங்கு வரவே, அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அனுப்பி இருந்தனர். போலீசாரின் சோதனையில் காருக்குள் இருந்த ஆண் ஏற்கனவே இறந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின்னர்,உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கான ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட சோதனையில், அரவிந்த் கார் கதவை சரியாக லாக் செய்யாமல் சென்றுள்ளார் என்றும், இதனை பயன்படுத்தி சில மர்மநபர்கள் காருக்குள் ஏறி இருக்கிறார்கள் என்றும் என தெரியவந்துள்ளது. ஆனால், காரில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் எப்படி இறந்தார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.