திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்!

திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

திருப்பூரில் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி விசைத்தறி உரிமையாளர்கள் 2 லட்சம் விசைத்தறியை நிறுத்தி 4-வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 -இதுகுறித்து திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்ததாவது;

தமிழகத்தில் சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில்  விசைத்தறிக்கு சிறப்பு பிரிவின் கீழ் குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வந்த மின்சாரம், தற்போது சிறு, குறு என்ற பொது அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனால் அவர்களுக்கு 30% மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  மேலும் ஆண்டுக்கு 6% மின் கட்டண உயர்வு  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி உரிமையாளர்களுக்கு இந்த கட்டண உயர்வு பெரும் சுமை.

அதனால் இந்த விசைத்தறி தொழிலை விடுத்து வேறு தொழிலுக்கு செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

-இவ்வாரு தெரிவித்தனர்.

இதனை எதிர்த்து, கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து  4- வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

logo
Kalki Online
kalkionline.com