திருப்பூரில் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி விசைத்தறி உரிமையாளர்கள் 2 லட்சம் விசைத்தறியை நிறுத்தி 4-வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-இதுகுறித்து திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்ததாவது;
தமிழகத்தில் சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் விசைத்தறிக்கு சிறப்பு பிரிவின் கீழ் குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வந்த மின்சாரம், தற்போது சிறு, குறு என்ற பொது அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் அவர்களுக்கு 30% மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு 6% மின் கட்டண உயர்வு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி உரிமையாளர்களுக்கு இந்த கட்டண உயர்வு பெரும் சுமை.
அதனால் இந்த விசைத்தறி தொழிலை விடுத்து வேறு தொழிலுக்கு செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப் பட்டுள்ளனர்.
-இவ்வாரு தெரிவித்தனர்.
இதனை எதிர்த்து, கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து 4- வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.