சென்னையில் இரவு முழுவதும் தார் சாலை போடும் பணி! சென்னை மேயர் பிரியா ஆய்வு!

சென்னையில் இரவு முழுவதும்  தார் சாலை போடும் பணி! சென்னை மேயர் பிரியா ஆய்வு!

சென்னையில் இரவு முழுவதும் தார் சாலை போடும் பணி அண்ணாநகர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இப்பணியை சென்னை மேயர் பிரியா ஆய்வு மேற்கொண்டார்.

"சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள 15 மண்டலங்களிலும், தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் 153 சிப்பங்களாக 370 சாலைகள் 71.09 கி.மீ நீளத்தில் ரூபாய் 35.36 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் அமைக்கப்படும்போது, ஏற்கெனவே பழுதான சாலைகளின் மேற்பரப்பு அகழ்ந்தெடுக்கப்பட்டு, அதன் பின்னர் தார்ச்சாலை உரிய அளவீடுகள் மற்றும் தரத்துடன் அமைக்கப்படுகிறது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் சாலைகளில் இரவு நேரங்களில் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், ஆலந்தூர், அடையார் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் சிமென்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணியானது, 3 சிப்பங்களாக 3.52 கி.மீ நீளத்தில், ரூ.3.65 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் திருவொற்றியூர், மாதவரம் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் சாலைகளில் ஒளிரும் விளக்குகள், குறியீடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் ரூ. 37.37 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு திட்ட சேமிப்பு நிதியின் கீழ் அனைத்து மண்டலங்களிலும், 30 சிப்பங்களாக 300 சாலைகளில் ரூ.51.367 கி.மீ நீளத்தில் ரூ.29.71 கோடி மதிப்பில் தார்ச்சாலைகளாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன."

சென்னை அண்ணாநகரில் நடைபெற்று வரும் இரவு நேர தார் சாலை போடும் பணியை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகரம் முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக சேதமடைந்த சாலைகள் முதலமைச்சர் உத்தரவின் பேரில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலைகள் முறையாக போடப்படுகிறதா, வெப்பநிலை, பிட்மென், சாலையின் தடிமன் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

சென்னை மாநகராட்சி மூலமாக 1,157 சாலைகள் ரூ.124 கோடி மதிப்பீட்டில் போடப்பட உள்ளன. 632 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 80 கோடி மதிபீட்டில் சாலைப் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன. சிங்கார சென்னை திட்டம் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பி.ஆர்.ஆர் கீழ் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 சாலைகள் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதில் 3 பணிகள் முடிவு பெற்றுள்ளன. 7 பணிகள் நடைப்பெற்று வருகின்றன. 18 பணிகள் நடைபெற உள்ளன. உட்புறச்சாலைகளும் சீரமைக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com