டிசிஎஸ் ஊழியர்களுக்கு இனிப்புச் செய்தி! - 5 மாத தாமதத்திற்குப் பிறகு சம்பள உயர்வு!

"சி3ஏ (உதவி ஆலோசகர்) மற்றும் அதற்கு இணையான பதவிகள் வரையிலான, தகுதியுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு அளிக்கப்படுவதாக நாங்கள் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். இது எங்கள் மொத்தப் பணியாளர்களில் 80% பேரை உள்ளடக்கும்"
tata consultancy services
tcs
Published on

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), தனது ஊழியர்களில் 80% பேருக்குச் சம்பள உயர்வு வழங்குவதாக அறிவித்துள்ளது.

12,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வதாக நிறுவனம் அறிவித்த சில வாரங்களுக்குப் பிறகு இந்தச் சம்பள உயர்வு வெளியாகியுள்ளது.

வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும் ஆண்டுச் சம்பள உயர்வு, இந்த முறை ஐந்து மாதத் தாமதத்திற்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்தியாவின் 283 பில்லியன் டாலர் மதிப்புள்ள தகவல் தொழில்நுட்பத் துறை, உலகளாவிய தேவை குறைவு, தணியாத பணவீக்கம் மற்றும் அமெரிக்க வர்த்தகக் கொள்கை குறித்த நிச்சயமற்ற தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களது திட்டங்கள் குறித்த முடிவுகளைத் தாமதப்படுத்துவதாக கடந்த மாதம் டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சவாலான இந்தச் சூழலில், ஊழியர்களில் பெரும் பகுதியினருக்குச் சம்பள உயர்வு வழங்க டிசிஎஸ் எடுத்துள்ள முடிவு, கவனிக்கத்தக்கதாக உள்ளது.

TCS நிறுவனம் புதன்கிழமை அன்று தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், சம்பள உயர்வு குறித்த மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது. அந்த மின்னஞ்சலில்,

"சி3ஏ (உதவி ஆலோசகர்) மற்றும் அதற்கு இணையான பதவிகள் வரையிலான, தகுதியுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு அளிக்கப்படுவதாக நாங்கள் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். இது எங்கள் மொத்தப் பணியாளர்களில் 80% பேரை உள்ளடக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சில மாதங்கள் அனுபவம் கொண்ட பயிற்சியாளர்கள் முதல் ஒரு பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய உதவி ஆலோசகர்கள் வரை அனைவரும் இந்தச் சம்பள உயர்விற்குத் தகுதியுடையவர்கள்.

  • இருப்பினும், மீதமுள்ள 20% மூத்த நிலை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து எந்த விவரமும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்படவில்லை.

"எங்கள் ஊழியர்களில் சுமார் 80% பேருக்கு செப்டம்பர் 1, 2025 முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்"

என்று டாடா குழும நிறுவனம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், மற்ற விவரங்கள் எதுவும் அதில் இல்லை.

ஏப்ரல் மாதத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஆண்டுச் சம்பள உயர்வு, வணிகச் சூழல் உறுதியாக இல்லாத காரணத்தால் தாமதப்படுத்தப்பட்டது என்று மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட TCS நிறுவனம் கூறியது.

இதையும் படியுங்கள்:
2025-ல் சூரிய சக்தி புரட்சி: ஒரு பேனல் மூலம் ஒரு ஊருக்கே மின்சாரம்!
tata consultancy services

இதற்கிடையில், ஜூன் மாதத்தில், பணியிலிருந்து விலகிய ஊழியர்களின் எண்ணிக்கை 13.8% ஆக உயர்ந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவே மிக அதிகமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com