

தாய்லாந்து நாட்டின் அரசியான அன்னை சிரிகிட்டின் மறைவிற்கு அந்த நாட்டில் உள்ள மக்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அவருடைய கருணை, பரோபகாரம் மற்றும் செல்வாக்கு அந்த நாட்டின் நவீன முடியாட்சியை வடிவமைக்க உதவிய மாபெரும் சின்னங்களாகும். அவர் நேற்று காலமடைந்த செய்தியை அவருடைய அரச குடும்பத்தினர்கள் இன்று உறுதிபடுத்தினார்கள். 2012-ம் ஆண்டிலிருந்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிரிகிட் அவர்கள் பெரும்பாலும் பொது வாழ்வில் இருந்து விலகி இருந்தார்.
1932-ம் ஆண்டு, தாய்லாந்து முழுமையான முடியாட்சியிலிருந்து அரசியலமைப்புச் சட்டத்திற்கு மாறியது. அதே ஆண்டில் தான் Queen சிரிகிட் கிதியகாரா அவர்கள் பிறந்தார். பிரான்சுக்கான தாய்லாந்து தூதரின் மகள் தான் இந்த சிரிகிட் கிதியகாரா. இவர் மிகுந்த செல்வாக்கோடும் சலுகைகளோடும் வளர்ந்தார்.
இவர் தனது குழந்தைப் பருவத்தின் ஒரு பகுதியை சுவிட்சர்லாந்தில் கழித்தார். பாரிஸில் இசை மற்றும் மொழிகளைப் பயின்றார்.
அங்குதான் அவர் தனது வருங்கால கணவரான மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜை (King Bhumibol Adulyadej) சந்தித்தார்.
இவர்கள் இருவருக்கும் 1949-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பிறகு ஒரு வருடம் கழித்து சிரிகிட்டிற்கு 17 வயது ஆனவுடன் திருமணம் நடைபெற்றது.
தாய்லாந்தின் ராணியாக இருந்த இவர், பூமிபோலின் மனைவியாக சுமார் 70 ஆண்டுகால ஆட்சியின் போது அவருக்கு உறுதுணையாக நின்று, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தன்னுடைய தொண்டுகளின் மூலமாகவும் மற்றும் உயர்மட்ட தோற்றங்களின் மூலமாகவும் தேசத்தின் அன்பைப் பெற்றார்.
சிரிகிட் தனது நேர்த்தி மற்றும் ஃபேஷன் உணர்வுக்காகப் பெயர் பெற்றவர் . 1960-ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் ஒரு அரசு இரவு உணவு அழைப்பிற்காக அமெரிக்காவிற்கு விஜயம் செய்தபோது, டைம் பத்திரிகை அவரை "பெண்ணியவாதி" என்று வர்ணித்தது, அதே நேரத்தில் பிரெஞ்சு நாளிதழான எல்'அரோர் அவரை "கவர்ச்சிகரமானவர்" என்று குறிப்பிட்டது. தாய்லாந்தின் பட்டு தொழிலுக்கு புத்துயிர் அளிக்கவும், பாரம்பரிய நெசவு நுட்பங்களைப் பாதுகாக்கவும் உதவிய பிரெஞ்சு கூத்தூரியர் பியர் பால்மைனுடன் சேர்ந்து இவரும் ஒத்துழைத்தார்.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக, அவர் ராஜாவுடன் தொலைதூர கிராமங்களுக்குச் சென்று, கிராமப்புற ஏழைகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை ஊக்குவித்தார். இது ஒரு இரக்கமுள்ள நபராக அவரது பிம்பத்தை வலுப்படுத்தியது.
சிரிகிட்டின் நீடித்த மரபானது அவர் ஆற்றிய தொண்டுகள், தாய்வழி நல்லொழுக்கத்தின் சின்னமாகவும் அவர் வகித்த அந்தஸ்திலும் இருக்கிறது. அவருடைய பிறந்த நாளான 1976-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம்தேதி தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது.