தேசிய, பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர்!

தேசிய, பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர்!
Published on

ளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 90 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 5 கோடியே 96 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வழங்கிடும் நிகழ்ச்சி இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்பது விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு இந்த உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

அதன்படி, சதுரங்கப் போட்டியில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற சென்னையை சேர்ந்த எஸ்.ரோஹித் கிருஷ்ணாவுக்கு 3 லட்சம் ரூபாயும், ஸ்பெயின் நாட்டின் சாண்டாண்டரில் நடைபெற்ற BWF ஜுனியர் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சென்னையை சேர்ந்த எஸ்.சங்கர் முத்துசாமிக்கு 4 லட்சம் ரூபாயும், ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற 57வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 21 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு 79 லட்சம் ரூபாயும் வழங்கினார்.

மேலும், சப்-ஜுனியர், ஜுனியர் மற்றும் சீனியர் தேசிய அளவிலான சாப்ட்டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 56 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு 2 கோடியே 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெற்ற BWF பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற மூன்று விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 2 கோடியே 55 லட்சம் ரூபாயும், புது தில்லியில் நடைபெற்ற கான்டிடெனன்டல் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற மூன்று விளையாட்டு வீரர்களுக்கு 15 லட்சம் ரூபாயும், மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்ற 20வது ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் ஆண்கள் குழுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வேலன் செந்தில்குமார் மற்றும் சவுரவ்கோசல் ஆகிய இருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாயும், பெண்கள் குழுப்பேட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜோஷனா சின்னப்பா, சுனைனா குருவில்லா மற்றும் அபராஜிதா பாலமுருகன் ஆகிய மூவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com