சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விமானத்தில் சந்தித்து செல்ஃபி எடுத்த பிரபல நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விமானத்தில் சந்தித்து செல்ஃபி எடுத்த  பிரபல நடிகை!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படப்பிடிப்புக்காக கொச்சிக்கு விமானத்தில் பறந்துள்ள நடிகர்'ரஜினிகாந்தை சந்தித்த பிரபல நடிகை எடுத்த செல்பி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய நடிகர்கள் நடிக்கும் படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக கொச்சி பறந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை விமானத்தில் சந்தித்தார் நடிகை அபர்ணா பாலமுரளி. ரஜினியுடன் அபர்ணா பாலமுரளி எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப்உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த நடிகர்கள் நடித்து வருகின்றனர். மேலும், படமும் பல்வேறு மாநிலங்களில் படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

சென்னையில் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தாலும், கர்நாடகா, மகாராஷ்ட்ரா என பல்வேறு மாநிலங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது அடுத்த கட்டமாக கேரளாவின் கொச்சியில் ஜெயிலர்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அதற்காக நடிகர் ரஜினிகாந்த் விமானத்தில் கொச்சிக்கு பறந்துள்ளார்.

ரஜினிகாந்தை விமானத்தில் பார்த்த வளரும் நடிகையான அபர்ணா பாலமுரளி மகிழ்ச்சியுடன் அவருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வெறித்தனமான ரசிகையாம் அபர்ணா பாலமுரளி. இதை அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார். அபர்ணா பாலமுரளி தற்போது நேரிடையாக விமானத்தில் சந்தித்து பேசி ரஜினியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை ஷேர் செய்து தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com