கோவில் திருவிழாவில் நடந்த கொடூர சம்பவம்! கிரேன் சரிந்து விழுந்து 4 பேர் பலி!

கோவில் திருவிழாவில் நடந்த கொடூர சம்பவம்! கிரேன் சரிந்து விழுந்து 4 பேர் பலி!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

அரக்கோணம் நெமிலி அருகே கீழவீதியில் மண்டியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மயிலர் திருவிழா நடைபெற்று வந்தபோது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கீழவீதியில் மண்டியம்மன் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக, மயிலர் திருவிழா நடைபெற்று வந்தது. அதில் கிரேன் மூலம் மாலை அணிவிக்க முயன்றபோது, கிரேன் கவிழ்ந்து விழுந்து இந்த பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், முத்துகுமார் (39), பூபாலன் (40), ஜோதிபாபு (19) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்நிலையில் இதில் சிக்கிய சின்னச்சாமி என்பவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்து ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக நெமிலி வட்டாட்சியர் சுமதி , கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் அனைவரும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com