போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு வயதைக் குறைக்க யோசனை!

போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு வயதைக் குறைக்க யோசனை!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 2021ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக அரசு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் 58லிருந்து 60 ஆக உயர்த்தி ஆணை பிறப்பித்தது அரசு. இந்த ஆணை 2021 மே 31ம் தேதிக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும் எனவும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணித் திறனில் பாதிப்பு ஏற்படும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து தகவல் வெளியாகி உள்ளது. கண் பார்வை கோளாறு, முதுமையினால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளால் பேருந்துகளை இயக்கும்போது சிக்கல் ஏற்படுவதால் பலர் விருப்ப ஓய்வு பெற்று செல்வதாகவும், விபத்துகள் ஏற்படும் சூழல் உருவாகலாம் என்பதால் ஓய்வு பெறும் வயது வரம்பு 58 போதும் என தொழிலாளர்கள் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனை ஏற்று தற்போது போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பை மீண்டும் 60லிருந்து 58ஆகக் குறைப்பது என தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வு வயதை 58 ஆக குறைப்பதற்கு துறை சார்ந்து அரசுக்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அது குறித்த அரசு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பதாகப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com