வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் பாரிஸ் அபூபக்கரின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை!

வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் பாரிஸ் அபூபக்கரின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை!

ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளில் வரி ஏய்ப்பு மற்றும் கறுப்புப் பணத்தைப் பதுக்கியதாகக் கூறப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் தொழிலதிபர் ஃபாரிஸ் அபூபக்கரின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித் துறையின் புலனாய்வுப் பிரிவு சோதனை நடத்தியது.

சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ஃபரிஸ் அபூ பக்கரை விசாரணைக்கு ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

காலை 8 மணியளவில் இந்த சோதனை தொடங்கியது. ஃபாரிஸின் வணிக நடவடிக்கைகள் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்திய பின்னர் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் 92 நிறுவனங்களில் ஃபாரிஸுக்கு பங்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. கொச்சியிலும் சென்னையிலும் அவருக்கு அலுவலகங்கள் உள்ளன. கொயிலாண்டியில் உள்ள ஃபாரிஸின் வீட்டிலும் ஒரு குழு சோதனை நடத்தியது.

கொச்சி மற்றும் சென்னை புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் கொச்சி மற்றும் கோழிக்கோட்டில் உள்ள ஃபாரிஸின் அலுவலகங்களுக்கு வந்தனர். திருச்சூரில் உள்ள ஷோபா டெவலப்பர்ஸ் அலுவலகத்திலும் குழுவினர் சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள ஃபாரிஸின் அலுவலகம் மற்றும் பெங்களூரு மற்றும் மும்பையில் உள்ள நிறுவனங்களின் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆதாரங்களின்படி, ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

"இது பல மாநிலங்களில் உள்ள புலனாய்வுப் பிரிவுகளின் கூட்டுத் தேடுதல் நடவடிக்கையாகும். கொச்சி மற்றும் சென்னை பிரிவுகளால் விசாரணை நடத்தப்படுகிறது. வரி ஏய்ப்பு செய்வதற்காக என்ஆர்ஐகளின் தலைமையில் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் ஃபரிஸ் நிலத்தை பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் மற்றும் இந்த நில பேரங்களுக்கான பரிவர்த்தனைகள் வெளிநாட்டில் நடந்துள்ளன. நிலத்தின் குறைந்தபட்ச மதிப்பு ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் பெரும் வரி ஏய்ப்பு நடந்துள்ளது. நிலம் விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான நிறுவனங்கள் மீதும் சந்தேகம் உள்ளது. அவர்கள் ஃபாரிஸின் பினாமிகளாக இருக்கலாம். ஃபாரிஸுக்கும் திருச்சூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கும் இடையே நில பேரம் நடந்ததாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஷோபா டெவலப்பர்ஸ் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது” என்று வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விசாரணைக்கு ஆஜராகுமாறு ஃபாரிஸுக்கு சம்மன் அனுப்பப்பட்ட போதிலும், அவர் இன்னும் பதிலளிக்கவில்லை. பலமுறை முயன்றும் அவரைச் சந்திக்க முடியவில்லை. சென்னையில் இருப்பதாகக் கூறும் உறவினர்களிடம் பேசினோம். ஆனால், லண்டனில் இருப்பதாக அவரது அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு மின்னஞ்சல் மூலமாகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உண்மையான தெளிவான தகவல்கள் மற்றும் விளக்கங்களைப் பெற அவரிடம் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று ஒரு அதிகாரி கூறினார்.

கேரளாவில் சிபிஎம் தலைவர்களுடனான நெருக்கமான தொடர்பின் காரணமாக ஃபாரிஸ் தொடர்ந்து செய்திகளில் இடம் பெற்று வந்தார். முன்னதாக, சர்ச்சைக்குரிய தொழிலதிபரான ஃபாரிஸுடன் முதல்வர் பினராயி விஜயன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின என்பது தற்போது குறிப்பிடத்தக்க விஷயங்களில் ஒன்றாகி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com