ஒரு நாட்டையே இருளில் மூழ்கடித்த குரங்கு! 

Monkey
Monkey
Published on

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் நிம்மதியாக நேரத்தை செலவிடவும், அன்றாட பணிகளில் இருந்து ஓய்வெடுக்கவும் திட்டமிட்டிருந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்வு அவர்களின் அன்றாட வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டது. இலங்கை முழுவதும் திடீரென மின்சாரம் தடைபட்டது.

முதலில் இது வழக்கமான பராமரிப்பு பணி காரணமாக இருக்கலாம் என மக்கள் நினைத்தனர். சில பகுதிகளில் மட்டுமே மின்தடை இருக்கும், விரைவில் சரியாகிவிடும் என்றும் நம்பினர். ஆனால் நேரம் செல்லச் செல்ல, நிலைமை தீவிரமானது. நகரங்கள், கிராமங்கள் என பாகுபாடில்லாமல் இலங்கை முழுவதும் இருளில் மூழ்கியது.

வீடுகளில் மின்விளக்குகள் அணைந்தன, மின் விசிறிகள் நின்றன. அலுவலகங்கள், கடைகள் என அனைத்தும் முடங்கின. செல்போன்களை சார்ஜ் செய்ய முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். இணைய சேவை துண்டிக்கப்பட்டதால் தகவல் தொடர்பும் பாதிக்கப்பட்டது. அன்றாட பணிகள் ஸ்தம்பித்தன. மருத்துவமனைகள், அவசர சேவைகள் போன்ற முக்கியமான இடங்களிலும் பாதிப்பு ஏற்பட்டது.

மின்வாரியம் அவசர அவசரமாக களத்தில் இறங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சனை தான் இந்த திடீர் மின்தடைக்கு காரணம் என அறிவித்தது. அதிர்ச்சி என்னவென்றால், இந்த தொழில்நுட்ப கோளாறுக்கு ஒரு குரங்கு காரணமாம்! பாணந்துறை மின் நிலையத்தில் குரங்கு ஒன்று புகுந்து விளையாடியதில், மின் கம்பிகள் சேதமடைந்து இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தக்காளியை சில நாட்கள் கெட்டுப்போகாமல் பத்திரமாக வைக்க சில டிப்ஸ்..!
Monkey

விலங்கால் ஏற்பட்ட இந்த அசாதாரண நிகழ்வு, நவீன உலகில் நாம் எவ்வளவு மின்சாரத்தை சார்ந்து இருக்கிறோம் என்பதை உணர்த்தியது. சில மணி நேர மின்தடையே மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டது. வர்த்தக நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. அன்றாட கூலி வேலை செய்பவர்கள் வருமானமின்றி தவித்தனர்.

இந்த திடீர் மின்தடை, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மின் நிலையங்களை பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். இது போன்ற அசாதாரண சூழ்நிலைகளை சமாளிக்க மாற்று திட்டங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தலைமுடிக்கு பாதுகாப்பான இயற்கை ஷேம்புகள் மற்றும் அதன் முக்கிய பயன்கள்!
Monkey

எது எப்படி இருந்தாலும், இந்த மின்தடை ஒரு கசப்பான அனுபவம். எதிர்பாராத நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. இயற்கை பேரழிவுகள் மட்டுமின்றி, விலங்குகளின் செயல்களும் கூட நம்மை பாதிக்கலாம். எனவே, எப்போதும் விழிப்புடன் இருப்பதும், எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதும் முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com