சிபிஐக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை ரத்து செய்தது தமிழ்நாடு அரசு!

சிபிஐக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை ரத்து செய்தது தமிழ்நாடு அரசு!

Published on

த்திய அரசின் புலனாய்வுத் துறையான CBIக்கு கொடுக்கப்பட்டிருந்த அனுமதியை இன்று தமிழ்நாடு அரசு ரத்து செய்து இருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில்,

‘மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும் அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946 (Delhi Special Police Establishment Act. 1946 (Central Act XXV of 1946)ன் பிரிவு 6ன்படி வகுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1989 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில் மேற்படி சட்டத்தின் கீழ் சில வகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை, இன்று தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்று ஆணையிட்டுள்ளது. இதன்படி, மத்திய புலனாய்வுத் துறை தமிழ்நாட்டில் இனி விசாரணையை மேற்கொள்வதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசின் முன் அனுமதியைப் பெற்று, விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற ஆணையினை ஏற்கெனவே மேற்கு வங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலங்கானா போன்ற பல்வேறு மாநிலங்கள் பிறப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது’ என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com