மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலம்!

Removing human waste
Removing human wasteIMG Credit: UN news
ஆனந்த் ஸ்ரீனிவாசன்

என் பெயர் ஆனந்த் ஶ்ரீனிவாசன். வயது 75. நான் தபால் இலாகாவில் உயர் அதிகாரியாக பணி புரிந்து 2010இல் ஓய்வு பெற்றவன். ஆறு  வயது முதல் கல்கி வாசகன். 1985முதல் பல்வேறு பத்திரிக்கைகளில் சமூக பிரசனைப்பற்றி  எழுதி உள்ளேன்.  வாரமலர் தினமலரில் T VR நினைவு சிறுகதைப் போட்டியில் மூன்று முறை பரிசு பெற்றுள்ளேன். என் கதைகள் வாரமலர்,குங்குமம், கல்கி மங்கையர்மலர், விகடகவி முதலெழுத்து தினமணி கதிர் போன்ற இதழ்களில் பிரசுரம் ஆகி உள்ளன. இது வரை 75 கதைகள் எழுதி 5கதைத் தொகுப்பு வெளியிட்டு உள்ளேன். 

Updated on

’மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலம்’ முதலிடம் எந்த மாநிலம் தெரியுமா?

ஒரு காலத்தில் கழிபறை கழிவுகளை ரு சமுதாயத்தினர் அள்ளி அதை சுத்த படுத்தினார். பிறகு அரசு அறிவிப்பை தொடர்ந்து அந்த முறை கைவிடப்பட்டது. நவீன கழிப்பறைகள் ஒவ்வொரு வீட்டுக்கும் அவசியம் என் அரசின் அறிவுரை படி கழிப்பறைகள் கிராமத்திலும் கட்ட ஆரம்பித்தனர்.

ஆனாலும் நகர் புறங்களில் மனித கழிவை இயந்திரம் மூலம் எடுக்கும் முறை படி கிராமத்தில் மனித கழிவுகளை இன்னொரு மனிதன் எடுக்கும் பழக்கம் இன்றும் இருந்து கொண்டுருக்கிறது.

கிராமங்களில் இதற்கான விழிப்புணர்வு இல்லை.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் நடைமுறையில் அதிகம் பேர் இறந்திருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது.

மத்திய சமூக நீதித் துறையின் புள்ளிவிவரங்களின்படி 2019 முதல் 2024 வரையில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 67 பேர் உயிரிழந்துள்ளனர்.!

63 உயிரிழப்புகளுடன் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும் 51 உயிரிழப்புகளுடன் ஹரியானா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

தலா 49 உயிரிழப்புகளுடன் குஜராத்தும் உத்தரப் பிரதேசமும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஒரு மனிதன் கழிவை இன்னொரு மனிதன் அள்ளும் இந்த நிலைமை மாற வேண்டும்.

செப்டிக் டேங்க் சுத்தப் படுத்தும் போது அதிலிருந்து வரும் வாயு மூலம் மூச்சு திணறி இறக்கிறார்கள்.

வேண்டாம் இனி இந்த விஷ பரிட்சை.

இதையும் படியுங்கள்:
நம்ப முடியவில்லை! நம்ம சென்னையில் Hyperloop Train? 30 நிமிடங்களில் திருச்சி!
Removing human waste
logo
Kalki Online
kalkionline.com