திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு! - லட்சக்கணக்கான பக்தர்கள் ஷாக்..!

Tirupathi
Tirupathi
Updated on

திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம், அங்க பிரதக்ஷணம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக புதிய குலுக்கல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல் ஆன்லைன் முன்பதிவு முறையில் டிக்கெட்டுகள் வழங்கப்படாது. இந்த புதிய நடைமுறை, பக்தர்களுக்கு அங்க பிரதக்ஷணம் செய்ய வாய்ப்புகளை சமமாக அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, தினசரி 750 பேருக்கு ஆன்லைன் மூலம் அங்க பிரதக்ஷணம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால், இனிமேல் இந்த டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் மட்டுமே வழங்கப்படும்.

ஞாயிறு முதல் வியாழன் வரை தினமும் 750 டிக்கெட்டுகளும், சனிக்கிழமைகளில் 500 டிக்கெட்டுகளும் குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும். வெள்ளிக்கிழமைகளில் அங்க பிரதக்ஷணம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: பக்தர்கள் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://tirupatibalaji.ap.gov.in) தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படும்.

தகவல் தொடர்பு: குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

முக்கிய நிபந்தனைகள்

புதிய விதி: ஒரு முறை அங்க பிரதக்ஷணம் செய்த பக்தர், அடுத்த 180 நாட்களுக்கு மீண்டும் அங்க பிரதக்ஷணம் செய்ய டிக்கெட் பெற முடியாது. இதற்கு முன் இந்த நிபந்தனை 90 நாட்களாக இருந்தது.

இதையும் படியுங்கள்:
ஷாக்! படப்பிடிப்பில் திடீர் மயக்கம்... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரோபோ சங்கர்..!
Tirupathi

முன்பதிவு தேதி: டிசம்பர் மாதத்திற்கான அங்க பிரதக்ஷண டிக்கெட்டுகளைப் பெற, பக்தர்கள் இம்மாதம் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த புதிய குலுக்கல் முறை, அங்க பிரதக்ஷணம் செய்ய விரும்பும் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு சமமான வாய்ப்பை வழங்குவதை உறுதி செய்கிறது. மேலும், இது டிக்கெட் முறைகேடுகளைத் தடுக்கவும் உதவுகிறது.

logo
Kalki Online
kalkionline.com