டிசம்பர் மாதம் திருப்பதி போறீங்களா?  சிறப்பு தரிசன டிக்கெட் புக்கிங் இன்று தொடக்கம்!

திருப்பதி ஏழுமலையான்
திருப்பதி ஏழுமலையான்

திருப்பதியில் டிசம்பர் மாதத்துக்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பதி போனால் திருப்பம்" என்பது பக்தர்களின் தாரக மந்திரம், அந்த திருப்பதி ஏழுமலையானை வருடம் ஒரு முறையாவது தரிசித்து விட வேண்டும் என்பதும் பக்தர்களின் ஏகோபித்த ஆசை. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதில், 300 ரூபாய் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனத்திற்காக 10 முதல் 12 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டு செல்கின்றனர். 

இந்த நிலையில், திருப்பதியில் ஏழுமலையானை டிசம்பர் மாதம் வழிபட , 300 ரூபாய் தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது. டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் WWW.tirupathibalaji.ap.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் டிக்கெட்டை புக் செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com