
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காலியாக உள்ள 240 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது
நிறுவனம் : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC)
வகை : தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்: 240
பணியிடம் : செங்கல்பட்டு
பணிகள் : பருவகால பட்டியல் எழுத்தர்(Bill Clerk),
பருவகால உதவுபவர்(Helper),
பருவகால காவலர்(Watchman)
ஆரம்ப நாள் : 17.09.2025
கடைசி நாள் : 07.10.2025
அதிகாரப்பூர்வ
இணையதளம் : https://www.tncsc.tn.gov.in/
1. பதவி: பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal Bill Clerk)
சம்பளம்: மாதம் Rs.5,285+ DA (Rs.5087/-) + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி Rs.120/-
காலியிடங்கள்: 80
கல்வி தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழத்தில் இளங்கலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பதவி: பருவகால உதவுபவர் (Seasonal Helper)
சம்பளம்: மாதம் Rs. 5,218 + DA (Rs.5087/-) + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி Rs.120/-
காலியிடங்கள்: 80
கல்வி தகுதி: பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பதவி: பருவகால காவலர் (Seasonal Watchman)
சம்பளம்: மாதம் Rs. 5,218 + DA (Rs.5087/-) + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி Rs.120/-
காலியிடங்கள்: 80
கல்வி தகுதி: பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்:
SC & SCA/ST விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்
BC/BC(M)/MBC விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 34 வயதுக்குள் இருக்க வேண்டும்
OC விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.10.2025
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் பணிக்கு விண்ணப்பிக்க மதுரை மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் உரிய சான்றுகளுடன் கீழ்கண்ட முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய மின்னஞ்சல் (Email-id) முகவரியினை விண்ணப்பத்தில் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அனைத்து தொடர்புகளும் (அழைப்பு கடிதம் போன்றவை) மின்னஞ்சல் மூலமாகவே அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கப்படும் பதவியின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 07.10.2025 மேலும் 07.10.2025 அன்று மாலை 5.00 மணிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பம் வந்து சேரவேண்டிய முகவரி:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
மண்டல அலுவலகம், செங்கல்பட்டு
புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2வது தளம் A பிளாக், வெண்பாக்கம், செங்கல்பட்டு-603111
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 07.10.2025.