தொடர்ந்து இரண்டு முறை ரயில் மீது தாக்குதல்... சிசிடிவியில் சிக்கிய 4 பேர்!

தொடர்ந்து இரண்டு முறை ரயில் மீது தாக்குதல்... சிசிடிவியில் சிக்கிய 4 பேர்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மேற்கு வங்க மாநிலத்தில், பிரதமர் மோடி அவர்கள் வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி மூலமாக கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, கடந்த 2ம் தேதி ஹவுராவில் இருந்து ஜல்பைகுரிக்கு இந்த வந்தே பாரத் ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ரயில் மால்டா பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, மர்ம நபர்கள் சிலர் ரயிலின் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.

இதையடுதது மறுபடியும் 3ம் தேதி இந்த ரயில் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இதுகுறித்தான சிசிடிவி வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சியில் அந்த சமயம் அந்த பகுதியில் 4 பேர் நின்றது பதிவாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது போலீசார் அந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com