உதயநிதி சிறப்பாக செயல்படுவார் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை

உதயநிதி சிறப்பாக செயல்படுவார் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பாக 6ஆவது ஜீனியர் பெடரேஷன் கோப்பைக்கான ஆண்கள், பெண்கள் கபடி போட்டிகள் மதுரையில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 1ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் ஜனவரி 3ஆம் தேதி (இன்று) வரை நடைபெறுகிறது. 

பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி ஈரானில் நடைபெற உள்ள உலக ஜூனியர் கபடிப் போட்டிக்கு,  இந்தியாவின் சார்பில் பங்கேற்க தகுதிவாய்ந்த கபடி விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் கபடி போட்டியை, அமைச்சூர் கபடிக் குழு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடத்துகிறது. போட்டியை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ துவக்கி வைத்தார். 

இதையடுத்து, செய்தியாளரை சந்தித்த அவர்,

“மதுரையில் இந்த கபடிப் போட்டி நடைபெறுவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இருந்து வீரர்கள், வீராங்கனைகள் 252 பேர் இங்கு வந்து போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் அடுத்த மாதம் ஈரானில் நடைபெறும் உலக கபடிப் போட்டியில் விளையாட உள்ளனர். இந்தியா சார்பில் 30 பேர் தேர்வு செய்யப்பட்டு, 12 நபர்கள் விளையாட செல்வார்கள். இதில் தமிழர் ஒருவரும் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.” என்பது நமக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

மதுரையில் நடைபெறும் இந்த தகுதி சுற்று கபடி போட்டிக்கு தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மிகுந்த ஒத்துழைப்பும் அளித்து வருகிறார். இது  மகிழ்ச்சியளிக்கிறது. அமைச்சூர் கபாடிக் குழுவிற்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை வழங்கியதற்காக நான் பாராட்டுக்கிறேன். விளையாட்டுத் துறை அமைச்சராக இளைஞரான உதயநிதி சிறப்பாக செயல்படுவார் என நான் நம்புகிறேன்.

“ஒவ்வொரு அரசும் விளையாட்டுக்கு துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். தற்போது ஆட்சியில் உள்ள தி.மு.க.அரசு,  இன்னும் கூடுதலாக நிதி ஒதுக்கும் என்று நம்புகிறேன்.

தற்போதுள்ள விளையாட்டு ஸ்டேடியங்களின் எண்ணிக்கை குறைவுதான்,   இன்னும் கூடுதலாக விளையாட்டு ஸ்டேடியங்கள்  இருக்க வேண்டும். இதற்காக சட்டமன்றத்தில் நான் குரல் கொடுப்பேன் எனவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

இப்போட்டியில் ஜூனியர் ஆண்கள் அணியில் ராஜஸ்தான், ஹரியானா, சந்திகர், பீகார், மகாராஷ்டிரா, டெல்லி, மத்திய பிரதேஷ், தமிழ்நாடு ஆகிய அணிகளும்; ஜூனியர் பெண்கள் அணியில் ஹரியானா, பீகார், இமாச்சலப் பிரதேஷ், தெலுங்கானா, மகாராஷ்டிரா, சந்திகர், வெஸ்ட் பெங்கால், தமிழ்நாடு ஆகிய அணிகளும் கலந்து கொண்டுள்ளன. 

போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக 50,000/- ரூபாயும், இரண்டாவது பரிசாக 30,000/- ரூபாயும்,   3வது பரிசாக ரூ.20,000/- வழங்கப்பட உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com