

மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார் . அதில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் ஓர் பார்வை
* வரும் ஆண்டுகளில் 1.5 லட்சம் சுகாதாரப் பணியாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
* மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த தனியார் துறைகளோடு இணைந்து நாடு முழுவதும் 5 மருத்துவ முனையங்கள் அமைக்கப்படும்.
* நாட்டின் 3 இடங்களில் சர்வதேச தரத்தில் ஆயுர்வேத சிகிச்சை மையம் நிறுவப்படும்.
* மருத்துவ சிகிச்சைகளுடன், நோய் கண்டறிதல் உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்படும்.
* நாள்பட்ட நோயாளிகளுக்கு உதவிபுரிய 1.5 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படும்.
* மாவட்டந்தோறும் மாணவிகளுக்கான விடுதிகள் அமைக்கப்படும்.
* மருத்துவ சுற்றுலாவை மேம்படுதத நாடுமுழுவதும் 5 மருத்துவ முனையங்கள் அமைக்கப்படும்.
* ஏஐ, குவாண்டம் தொழில்நுட்பத்தை பல்வேறு துறைகளில் அறிமுகப்படுதத ஒருங்கிணைந்த திட்டங்கள் அமைக்கப்படும்.
* தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கலாச்சார செழுமையை விளக்கும் வகையில் மையம் அமைக்கப்படும்.
* ஆதிச்சநல்லூரில் உள்பட 15 இடங்களில் உள்ள தொல்லியல் சார்ந்த இடங்கள் மேம்படுத்தப்படும்.
* ஆயுஸ் மருந்தகங்கள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
* பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம்.
* புலிகட் ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம்.
* 2026-27 ஆம் நிதியாண்டில் ரூ.16.5 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு
* நாடு முழுவதும் கால்நடை மருத்துவ கல்லூரிகளுக்கு மூலதன மானியம் வழங்கப்படும்.
* 500 நீர்நிலைகளில் மீன்பிடி தொழில், கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
* கார்பன் உமிழ்வை குறைக்க 4 துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு.
நாட்டின் கிழக்கு, மேற்கு பகுதிகளை இணைக்க பிரத்யேக சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும்.
* அடுத்த 5 ஆண்டுகளில் பொதுப்போக்குவரத்திற்காக நாடு முழுவதும் 20 புதிய நீர்வழித்தடங்கள் அமைக்கப்படும்.
* 2026-27 ஆம் நிதியாண்டுக்கான மூலதனச்செலவு ரூ.12.20 லட்சம் கோடியாக உயர்வு.
* வாரணாசி, பாட்னாவில் கப்பல் பழுது பார்க்கும் தளங்கள் அமைக்கப்படும்.
* சென்னை- பெங்களூரு, ஹைதராபாத் இரு மார்க்கத்தில் அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும்
* மூலதன செலவுக்கு ரூ12.2 லட்சம் கோடி ஒதுக்கீடு.
* எரிபொருள் போன்ற முக்கிய துறைகளை ஊக்குவிக்க ரூ.20,000 கோடி ஒதுக்கீடு.
* நாடு முழுவதும் 7 வழித்தடங்களில் அதிவேக ரயில் சேவை தொடங்கப்படும்.
* 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களின் மேம்பாட்டிற்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு.
* வங்கித் துறை சீர்திருத்தம் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்படும்.
* பவர் பைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிகேஷன், கார்பரேஷன் நிறுவனங்கள் புத்தாக்கம் செய்யப்படும்.
* நாள்பட்ட நோய்களை தடுக்கும் நடவடிக்கைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கப்படும்.
* 10 சதவீதம் உள்ள முதலீட்டு வரம்பு 24 சதவீதம் ஆக அதிகரிக்கப்படுகிறது.
* மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு SHE MART என்ற பெயரில் கடைகள் அமைக்கப்படும்.
* முந்திரி உற்பத்தியை மேம்படுத்த பிரத்யேக இயக்கம் முன்னெடுக்கப்படும்.
* சந்தன மரங்கள் சாகுபடிக்கு மாநில அரசுகளுடன் சேர்ந்து திட்டம் உருவாக்கப்படும்.
* வெளிவாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான வரம்பு 10 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக அதிகரிப்பு
* மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும்.
* பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலா வழித்தடம் அமைக்கப்படும்.
* நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் மாநிலங்களுக்கு படி ரூ.1.40 லட்சம் கோடி விடுவிப்பு