

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதற்கு முன்பாக வாக்கு சேகரிப்பில் அவர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியிலுள்ள ஐஸ்ஹவுஸ் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களும் உடன் இருந்தார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் உதயநிதி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர். சுகந்தியிடம் மனுத் தாக்கல் செய்தார்.