திடீரென மனம் மாறிய டிரம்ப் - இந்திய மாம்பழம், மாதுளை, தேயிலை மீதான தண்டனை வரிகள் நீக்கம்..!

Trump announces tariff cuts with Indian mango, pomegranate, tea
Trump lifts tariffs: Indian mango, pomegranate, tea shine
Published on

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்! உலக வர்த்தகக் களத்தில் அதிரடி "வெடிகுண்டு"களை வீசி வந்தவர்.

யார் மீதும் வரியை ஏற்றி, தனது வர்த்தகக் கோட்டையை வலுப்படுத்த முயன்றவர். ஆனால், இம்முறை அவர் எடுத்திருக்கும் முடிவு, அவருடைய பிடிவாத வர்த்தகக் கோட்டைக்குள் உடைப்பை ஏற்படுத்தியது!

என்ன நடந்தது? அதிபரின் கோட்டைக்குள்ளேயே ஒரு "பணவீக்கப் பூதம்" நுழைந்து விட்டது!

அமெரிக்க மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்த இந்தப் பூதத்தை அடக்க வேண்டிய கட்டாயத்தில், அவர் இறக்குமதியாகும் உணவுப் பொருட்களுக்கான கூடுதல் தண்டனை வரிகளை அவசரமாகத் தளர்த்தியுள்ளார்.

மாம்பழத்தின் மாயாஜாலம்: விலக்கு அளிக்கப்பட்ட உணவுப் பொருட்களின் பட்டியல்!

இது வெறும் வரித்தள்ளுபடி அல்ல, இந்திய விவசாயிகளுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் அடித்த மெகா ஜாக்பாட்!

அமெரிக்க வெள்ளை மாளிகையின் சமீபத்திய அறிக்கை என்ன சொல்கிறது தெரியுமா?

வெப்பப் பிரதேசப் பழங்கள், பழச்சாறுகள், காபி (Coffee), தேயிலை (Tea), கொக்கோ (Cocoa), ஆரஞ்சு (Oranges), தக்காளி (Tomatoes), மாட்டிறைச்சி (Beef) மற்றும் மசாலாப் பொருட்கள் (Spices) உட்படப் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்ட "தண்டனை வரிகள்" அதிரடியாக ரத்து!

இதில் முக்கியமானது, இந்திய மாம்பழங்கள் மற்றும் சத்தான மாதுளைகளின் நுழைவு அனுமதி இப்போது இலகுவாகிவிட்டது.

முன்னர், போட்டி வரிகளாக 25% வரி விதித்த டிரம்ப் தான் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, அமெரிக்காவில் பரிந்துரைக்கப்படும் ஜெனரிக் மருந்துகளில் 47% வழங்கும் இந்தியாவின், உயிர் காக்கும் ஜெனரிக் மருந்துகளுக்கு விலக்கு அளித்தவர், இப்போது மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் சலுகை வலையை விரித்திருக்கிறார்.

டிரம்ப் போன்ற ஒரு பிடிவாதமான தலைவர், இந்த முடிவை எடுக்கக் காரணம் என்ன? வெறும் வர்த்தகம் அல்ல, அங்கே நிகழ்ந்த ஒரு "அரசியல் நிலநடுக்கம்" தான்!

சமீபத்தில் நியூயார்க், நியூஜெர்சி போன்ற மாநிலங்களில் நடந்த உள்ளூர்த் தேர்தல்களின் போது, டெமாக்ரட் கட்சியினர் கையில் எடுத்த ஒரே அஸ்திரம், "விலைவாசி உயர்வு" (Affordability) தான்.

உலக அரசியல் சிக்கல்களோ, முதலீடுகளோ அல்ல... 'வீட்டில் அரிசி, பருப்பு விலை ஏறுவது'தான் வாக்காளர்களின் தலையாய கவலையாக இருந்தது.

இந்த விலைவாசியை மக்கள் பட்ஜெட் மீது ஏவியிருக்கும் ஒரு "மிசைல் தாக்குதல்" போலவே உணர்ந்தனர்.

NBC செய்தி வெளியிட்ட வாக்கெடுப்பின்படி, பதிவு செய்த வாக்காளர்களில் 63% பேர் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதாரம் குறித்த டிரம்ப்பின் செயல்பாட்டில் ஏமாற்றம் அடைந்ததாகத் தெரிவித்தனர்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த வாக்காளர்களில் 30% பேரும் இதே கருத்தை ஒப்புக்கொண்டனர்.

அதிபர் டிரம்ப், இந்த விலைவாசி விவாதத்தை "எதிர்க்கட்சிகளின் நாடகம்" என்று விமர்சித்தாலும், புள்ளிவிவரங்கள் பொய் சொல்லவில்லை:

பட்ஜெட்டை திக்குமுக்காடச் செய்த 30% விலை ஏற்றம்!

  • வறுத்த காபியின் விலை 18.9% எகிறியது.

  • மாட்டிறைச்சியின் விலை 14.7% அதிகமானது.

  • அதிலும் குறிப்பாக, இந்திய இறக்குமதிப் பொருட்கள் (மளிகைக் கடைகளில்) சுமார் 30% உயர்ந்து, அமெரிக்க மக்களின் பாக்கெட்டைப் பதம் பார்த்தது!

இந்த இமாலய விலையேற்றத்தால் ஏற்பட்ட அரசியல் வெப்பத்தைத் தணிக்க, டிரம்ப் அரசுக்கு வேறு வழியே இல்லை.

"மாம்பழ இராஜதந்திரம்": எல்லையைத் தாண்டிய இனிப்பு உறவு!

இந்தச் சலுகை மூலம் இந்தியப் பொருட்களுக்குக் கிடைத்த இடம், தனிச்சிறப்பு மிக்கது!

2006-ல் புஷ் மாம்பழத் தடையை நீக்கியதிலிருந்து, இந்தப்பழம் இந்தியா-அமெரிக்க உறவில் ஒரு "இராஜதந்திர சின்னம்" போலவே பார்க்கப்படுகிறது.

மிகச் சமீபத்திய மோடி-டிரம்ப் கூட்டறிக்கையில் கூட, இந்திய மாம்பழ ஏற்றுமதியை அமெரிக்கா ஊக்குவித்ததற்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள்:
அத்தியாவசியப் பொருட்களுக்காக அமெரிக்கா கையேந்தும் நேரம் வந்தாச்சு..!
Trump announces tariff cuts with Indian mango, pomegranate, tea

இப்போது, வரிகள் நீக்கப்பட்டிருப்பதால், 'அல்போன்ஸா' போன்ற இந்தியாவின் தரமான உணவுப் பொருட்கள், அமெரிக்காவின் கடைகளை வெள்ளமென நிரப்பும்.

இந்தச் சாதகமான நடவடிக்கை, இந்திய ஏற்றுமதியாளர்களின் வருமான கிராஃபை (Graph) நிச்சயமாக ராக்கெட் வேகத்தில் உயர்த்தும் என நம்பலாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com