எல்.ஐ.சி-யை உலுக்கிய அமெரிக்க பத்திரிக்கை! 32,000 கோடி ரகசியம்: அதானிக்கு நிதியா..?

Washington Post logo vs LIC
Washington Post vs LIC clash
Published on

நாட்டின் நிதித் துறையில் மிகவும் நம்பகமான பெயரைக் கொண்ட நிறுவனம் எல்.ஐ.சி (Life Insurance Corporation of India). கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கையைத் தாங்கி நிற்கும் இந்த நிறுவனத்தின் மீதே, அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிக்கையான 'தி வாஷிங்டன் போஸ்ட்' ஒரு பெரிய குற்றச்சாட்டைக் கிளப்பியது.

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு குறித்த ரகசிய முடிவுகள், வெளி அழுத்தத்தின் பேரில் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு, இந்திய நிதித்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த சர்வதேசச் சவாலை எல்.ஐ.சி எப்படி எதிர்கொண்டது? அந்த மோதலின் பின்னணி என்ன?

சலசலப்பை ஏற்படுத்திய வெளிநாட்டுச் செய்தி

தி வாஷிங்டன் போஸ்ட் தனது கட்டுரையில் ஒரு தீவிரமான குற்றச்சாட்டை முன்வைத்தது. அதன்படி:

  1. எல்.ஐ.சி-யின் முதலீட்டு முடிவுகள் சுயமாக எடுக்கப்படவில்லை, மாறாக வெளிப்புறக் காரணிகளின் (அதாவது அரசியல் அல்லது அதிகார மையங்களின்) செல்வாக்கின் கீழ் எடுக்கப்பட்டன.

  2. இந்த ஆண்டு மே மாதம், அதானி குழுமத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் சுமார் $3.9 பில்லியன் (சுமார் 32,000 கோடி ரூபாய்) முதலீடு செய்வதற்கான ஒரு முக்கிய முன்மொழிவை எல்.ஐ.சி அதிகாரிகள் அவசர கதியில் நிறைவேற்றினர்.

  3. இத்தகைய பெரிய முதலீட்டுக்காக, நிறுவனத்தின் உயர்மட்டப் பிரிவு மூலம் ஒரு வழிகாட்டுதல் கூட தயாரிக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டது.

வெளிநாட்டுப் பத்திரிக்கை நேரடியாக இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தின் மீது அதன் முதலீட்டின் நேர்மையைப் பற்றிக் கேள்வி எழுப்பியதுதான் இந்தச் செய்தியின் உச்சகட்டப் பரபரப்புக்குக் காரணம்.

எல்.ஐ.சி-யின் ஆக்ரோஷமான பதில்

தி வாஷிங்டன் போஸ்ட்டின் இந்தக் கட்டுரையைப் பார்த்த எல்.ஐ.சி சும்மா இருக்கவில்லை.

சனிக்கிழமை அன்று ஒரு கடுமையான மறுப்பு அறிக்கையை வெளியிட்டு, அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலடி கொடுத்தது.

முற்றிலும் பொய்: "தி வாஷிங்டன் போஸ்ட் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை, ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளன.

திட்டம் எதுவுமில்லை: அதானி குழுமத்திற்கு நிதியைச் செலுத்த ஒரு வழிகாட்டுதல் அல்லது அத்தகைய எந்த ஒரு திட்டமும் எல்.ஐ.சி-யால் ஒருபோதும் தயாரிக்கப்படவில்லை.

  • சுதந்திரமான முடிவுகள்: எல்.ஐ.சி-யின் முதலீட்டு முடிவுகள் அனைத்தும் வாரியத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, மிகவும் விரிவான முறையான சரிபார்ப்புடன் (Due Diligence) சுதந்திரமாகவே எடுக்கப்படுகின்றன.

  • அரசு தலையீடு இல்லை: "நிதிச் சேவைகள் துறை (Department of Financial Services) அல்லது வேறு எந்த அமைப்பும் இத்தகைய முடிவுகளில் எந்தப் பங்கும் வகிப்பதில்லை."

இந்த அறிக்கை, எல்.ஐ.சி-யின் முடிவெடுக்கும் முறையைக் களங்கப்படுத்தி, அதன் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் மட்டுமே இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டதாகச் சாடியுள்ளது.

இதெல்லாம் வதந்தி.....LIC லாபத்தில் தான் இயங்குகிறது.

சர்வதேச அளவில் தனது முதலீடுகள் குறித்து கேள்விகள் எழுந்தாலும், எல்.ஐ.சி தனது நிதி பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.

  • நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1 FY26) தனது மொத்த நிகர லாபத்தில் (consolidated net profit) 3.91% உயர்வைப் பதிவு செய்துள்ளது.

  • கடந்த ஆண்டு இதே காலாண்டில் ₹10,544 கோடியாக இருந்த லாபம், தற்போது ₹10,957 கோடியாக அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
அதானியின் மாஸ்டர் பிளான்: புதிபோரி மின்நிலையம் மீண்டும் மின்னுகிறது..!
Washington Post logo vs LIC

இந்த மோதல், நிதிச் சந்தைகள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் இடையே உள்ள பதற்றத்தை வெளிப்படுத்துகிறது. ஒருபுறம் கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தாலும், எல்.ஐ.சி தனது வலுவான நிதித் தரவுகளையும், வெளிப்படையான முடிவெடுக்கும் செயல்முறையையும் நம்பி, தனது நம்பகத்தன்மையை மீண்டும் நிலைநாட்டியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com