வளர்ந்து வரும் மல்யுத்த நட்சத்திரம்..! உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் அணிக்கு தேர்வான வைஷ்ணவி..!

பொதுவாக, இந்திய மல்யுத்த வீரர்கள் ஜூனியர் பிரிவிலிருந்து சீனியர் பிரிவுக்கு மாறுவதற்கு நீண்ட பயணம் தேவைப்படுகிறது.
Vaishnavi Patil
Vaishnavi thebridge
Published on

உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தேசிய அணியில் மகளிருக்கான 65 கிலோ பிரிவில் இடம்பிடித்த மல்யுத்த வீராங்கனை வைஷ்ணவி பாட்டீலின் சாதனைகள் விளையாட்டு வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

அவருடைய தந்திரமான திறனையும், வலுவான தற்காப்பு உத்திகளையும் பார்த்தால், அவர் வெறும் நான்கு ஆண்டுகளாக மட்டுமே பாயில் மல்யுத்தம் செய்து வருகிறார் என்பதையும், பெரிய போட்டிகளில் கலந்துகொண்ட அனுபவம் அவருக்குக் குறைவாக இருப்பதையும் நம்புவது கடினம்.

அடுத்த மாதம் சாகிரெப் நகரில் நடைபெற உள்ள உலகப் போட்டிகளுக்கு, வைஷ்ணவி தனது சிறப்பான செயல்பாடுகளால் மற்ற போட்டியாளர்களை முறியடித்து இடம் பிடித்துள்ளார்.

Vaishnavi Patil
Vaishnavi PatilKarma Bhutia |Credit: PTI

பொதுவாக, இந்திய மல்யுத்த வீரர்கள் ஜூனியர் பிரிவிலிருந்து சீனியர் பிரிவுக்கு மாறுவதற்கு நீண்ட பயணம் தேவைப்படுகிறது.

உள்நாட்டுப் போட்டிகளில் அனுபவம் பெறுதல், ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பது, படிப்படியாக சர்வதேச சீனியர் போட்டிகளில் கலந்துகொள்வது என்று முன்னேறி உலகப் போட்டிகளுக்கு தகுதி பெற வேண்டும்.

ஆனால், நவி மும்பை அருகே கல்யாணைச் சேர்ந்த ஒரு சாலை ஓர உணவக உரிமையாளர் திலிப் பாட்டீலின் மகள் வைஷ்ணவி, தாமதமாக பயிற்சியைத் தொடங்கியும் அதிவேகமாக தேசிய அளவில் உச்சத்தை அடைந்துள்ளார்.

2016 ரியோ ஒலிம்பிக்கில் சாக்‌ஷி மாலிக் வென்ற பதக்கத்தைப் பார்த்த பிறகு, இவர் மல்யுத்தத்தைத் தேர்ந்தெடுத்தார்.

"2020 இறுதியில் தான் நான் பாயில், மல்யுத்தம் தொடங்கினேன். முன்பு மண் மல்யுத்தம் மட்டுமே செய்தேன்.

சாக்‌ஷியின் வெற்றி என்னை ஈர்த்தது," என்று பி.டி.ஐ-யிடம் வைஷ்ணவி கூறினார். வைஷ்ணவியின் தந்தை சாலை ஓர உணவகம் நடத்த, தாய் வீட்டு வேலைகளைக் கவனிக்கிறார்.

அவரது பயிற்சிக்கு பெற்றோரே உதவுகின்றனர். "மகாராஷ்டிராவில் நல்ல அகாடமிகள் இல்லாததால், ஹிசாருக்குச் சென்றேன்" என்று 22 வயதான வைஷ்ணவி தெரிவித்தார்.

இவர் கோச் ஜஸ்பீரின் வழிகாட்டுதலில் சுஷில் குமார் அகாதாவில் பயிற்சி பெறுகிறார்.

"அவர் தொடர்ந்து சொந்த ஊருக்குச் செல்வதைத் தவிர்த்ததுதான் முன்னேற்றத்துக்கு காரணம்," என்று ஜஸ்பீர் கூறினார்.

"முதலில் அவர் சில மாதங்கள் பயிற்சி பெற்று சொந்த ஊருக்குச் செல்வார். ஆனால், ஒரு வருடம் முழுவதும் பயிற்சி மையத்தில் இருக்க வேண்டும் என பெற்றோரிடம் கேட்டேன்.

அவர்கள் ஒத்துக்கொண்டனர், அவர் அர்ப்பணிப்புடன் உள்ளார்," என்றார்.

நீச்சலிலிருந்து மல்யுத்தத்திற்கு மாறிய பயணம்

வைஷ்ணவி முதலில் நீச்சலில் சிறந்து விளங்கி மாநில அளவில் பதக்கங்கள் வென்றார். ஆனால், மல்யுத்த வீரர்களுக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்து இதில் இணைந்தார்.

போர் விமானியாக விரும்பிய அவரது கனவு, பார்வைக்குறைபாடு காரணமாக நிறைவேறவில்லை.

"அவளது பார்வை எண் 9.7 இருந்ததால், போர் விமானியாக முடியாது என தெரிந்தது. நீச்சலில் சேர்த்தோம், ஆனால் அவள் விளையாட்டை மாற்ற விரும்பினாள்.

தொலைவில் இருந்த மையங்களுக்கு அனுப்ப தயங்கினோம். ஆனால், அவளது ஆர்வத்தைப் பார்த்து ஜஸ்பீர் சாரிடம் அறிமுகப்படுத்தி ஹிசாருக்கு அனுப்பினோம்," என்று திலிப் பாட்டீல் கூறினார்.

"என் சாலை ஓர உணவக வருமானம் அவளது பயிற்சிக்குச் செல்கிறது. வங்கிக் கணக்கு பூஜ்யம், விவசாயத்தால் குடும்பம் நடக்கிறது," என்று அவர் தியாகம் பகிர்ந்தார்.

ஒலிம்பிக் இலக்கு

ஹெலன் மாரௌலிஸை முன்மாதிரியாகக் கொண்ட வைஷ்ணவி, "அவர் அற்புதமான வீராங்கனை. அவரது போட்டிகளை பார்ப்பேன்.

இதையும் படியுங்கள்:
வெற்றிக்குச் சில தியாகங்கள் தேவை - ஒபாமா சொல்வது என்ன?
Vaishnavi Patil

உலகப் போட்டியில் பதக்கம் வெல்வேன், ஒலிம்பிக்கில் பதக்கம் எனது இலக்கு," என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com