காதலர் தின கொண்டாட்டம்.... பூக்களின் விலை திண்டாட்டம்!

காதலர் தின கொண்டாட்டம்.... பூக்களின் விலை திண்டாட்டம்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

காதலர் தினம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ரோஜாக்கள் தானே. ரோஜா பூக்கள் இல்லாத காதலர் தினமா? காதலர் தினத்திற்கு பலரும் ரோஜாக்களை பரிசளிப்பதால் ரோஜா பூக்களுக்கு வருடம் தோறும் கிராக்கி ஏற்படுவது வாடிக்கை தான். அதன் காரணமாக ரோஜா பூக்களின் விலை ராக்கெட் வேகத்தில் சர சரவென உயர்வதில் ஆச்சர்யமுமில்லை. அதே நேரத்தில் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தைக்கு ஓசூர் ஊட்டி பெங்களூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து விதவிதமான ரோஜா பூக்கள், மற்றும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வந்து கொண்டுள்ளன

காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை சந்தையில் ரோஜா பூக்களுக்கு அதிக கிராக்கி இருப்பதால் அவற்றின் விலை கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்தது.

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ரோஜா பூக்களின் விலை மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது. 120 ரூபாய் முதல் 130 ரூபாய் விற்பனையான ரோஜா கட்டு ஒன்று இன்று 400 ரூபாய்க்கு விற்பனையானது.

காதலர் தினம் கொண்டாட்டத்தால் தோவாளை மலர் சந்தையில் ரோஜா பூக்களின் விலை அதிகரித்துள்ளது. 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா 120 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனையானது. இன்று ஒரு கட்டு ரோஜாப்பூ 400 ரூபாய்க்கு விற்பனையானது. ரோஜா பூக்களை கேரளா மற்றும் பல்வேறு ஊரிலிருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். அதே நேரம் ஒரு கிலோ பிச்சிப்பூ 1000 ரூபாய்க்கும், மல்லிகை பூ 700 ரூபாய்க்கும் விற்பனையானது.

logo
Kalki Online
kalkionline.com