

காரைக்குடியில் நாளை விஜய் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். அதற்கு 37 நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது.
நாளை காரைக்குடியில் விஜய் பிரச்சாரம் செய்ய 37 நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி அளித்துள்ளது. நாளை மதியம் 12:30 மணி முதல் 2:00 மணிக்குள் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும், விஜய் எந்த வழியில் பிரச்சாரத்திற்கு வருகிறாரோ, அதே பாதையில் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளது. தொண்டர்கள் ஆர்வமிகுதியால் அவருடைய வாகனத்தைப் பின் தொடர்வதும், விபத்துகளில் சிக்குவதை தடுப்பதற்காகவும் விஜய் பிரச்சார வாகனத்தை யாரும் பின் தொடரக் கூடாது என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.