கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆலயங்களில் தரிசனம் செய்ய விஐபி பக்தர்கள் ரூ.300 செலுத்த வேண்டும்!

கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆலயங்களில் தரிசனம் செய்ய விஐபி பக்தர்கள் ரூ.300 செலுத்த வேண்டும்!

இதுவரை நடைமுறையில் இல்லாத வகையில் இனிமேல் சார்தாம் யாத்திரை செல்லும் வி ஐ பி பக்தர்கள் முதன்முறையாக விஐபி பக்தர்கள் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் தாமில் தரிசனம் செய்ய 300 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

திருப்பதி பாலாஜி, வைஷ்ணோ தேவி, மஹாகாலேஷ்வர் மற்றும் சோம்நாத் கோவில்களில் 'பூஜை முறை' மற்றும் தரிசன ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின்னர், பத்ரிநாத் கேதார்நாத் கோவில் கமிட்டி (BKTC) சார்தாமில் விஐபி பக்தர்களுக்கான கட்டண முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இது தவிர, கேதார்நாத் கோவிலில் 100 கிலோ எடையுள்ள அஷ்டதாதுவால் செய்யப்பட்ட திரிசூலம் நிறுவப்படும்.

திங்களன்று, கேனல் ரோடு அலுவலகத்தில் பிகேடிசி தலைவர் அஜேந்திர அஜய் தலைமையில் வாரியக் கூட்டம் நடைபெற்றது, இதில் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் தாம் யாத்திரை ஏற்பாடுகள் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் வரவிருக்கும் 2023-24 நிதியாண்டுக்கான ரூ.76.26 கோடி பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது. இது தவிர, சார்தாம் யாத்திரைக்கான செயல் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

செய்தியாளர்களிடம் பேசிய BKTC தலைவர் அஜேந்திர அஜய், "இந்தக் கட்டணம் விஐபி யாத்ரீகர்களிடமிருந்து மட்டுமே வசூலிக்கப்படும். பொதுவான யாத்ரீகர்களின் நேரம் மற்றும் லைன்கள் பாதிக்கப்படாது. நாட்டின் பிற புனிதத் தலங்களில் உள்ள இயக்க முறைமையை ஆராய்ந்து அறிந்த பிறகு, எங்களது முந்தைய முடிவு ஒப்பீட்டளவில் மாறியது. இப்போது எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சிறந்தது என்று நாங்கள் கருதுகிறோம். இது தனிப்பட்ட முடிவல்ல, நிபுணர்கள் மற்றும் பொது பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்த பிறகு கிட்டிய ஒருமித்த கருத்துப்படி, இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

விஐபி பக்தர்களை வரையறுப்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், பத்ரி கேதார் கோயில் கமிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி யோகேந்திர சிங், "BKTC நெறிமுறையின் கீழ், சிறப்பு நபர்கள் பிரிவில் வரும் அனைவரும் விஐபியாக கருதப்படுவார்கள்" என்று கூறினார். மேலும் கோவில்களுக்கு அழைத்துச் செல்வது, தரிசனத்திற்கு வரும் விஐபிகளுக்கு பிரசாதம் வழங்குவது போன்றவற்றை BKTC பணியாளர்கள் கவனித்துக்கொள்வார்கள். இதனால் விஐபி வசதி என்ற பெயரில் குழப்பம் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

"பக்தர்கள் கோவிலுக்கு என்ன நன்கொடைகள் அல்லது காணிக்கைகள் செய்தாலும், சம்பளம் வாங்கும் அர்ச்சகர்கள் மற்றும் BKTC ஊழியர்கள் அதை ஏற்க

மாட்டார்கள்", இதை மீறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிங் கூறினார்.

கோவில்களில் காணிக்கைகளை எண்ணுவதற்கு வெளிப்படையான ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்காக இரு இடங்களிலும் வெளிப்படையான கண்ணாடி குடில்கள் கட்டப்படும். இதில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்" என்றும் சிங் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com