இது ஒரு சாதாரண மோசடி அல்ல, ஒரு குடும்பமே சேர்ந்து நடத்திய திட்டமிட்ட குற்றம்..!

VISA
VISA
Published on

ஒரு வெளிநாட்டு வேலை... நல்ல சம்பளம்... சொந்த வீடு... என்று தங்கள் வாழ்க்கைக் கனவுகளை நம்பி, சமூக வலைதளங்களில் வந்த கவர்ச்சியான விளம்பரங்களைப் பார்த்த அப்பாவி இந்தியர்கள், ஒரு நொடியில் தங்கள் சேமிப்பையும், கனவுகளையும் தொலைத்துள்ளனர்.

குஜராத்தின் ஹிம்மத்நகரைச் சேர்ந்த அப்பா-மகன் ஜோடி, சிகந்தர் லோதா மற்றும் அவரது மகன் சமன் லோதா, இந்தியா முழுவதும் உள்ள வேலையற்ற இளைஞர்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாயைக் கொள்ளையடித்துள்ளனர். இது ஒரு சாதாரண மோசடி அல்ல, ஒரு குடும்பமே சேர்ந்து நடத்திய திட்டமிட்ட குற்றம்.

எப்படி நடந்தது இந்த மோசடி?

சிக்கந்தர் மற்றும் சமன் ஆகிய இருவரும் சமூக வலைதளங்களில் வெளிநாட்டு வேலைக்கான விளம்பரங்களை வெளியிட்டனர்.

Highlight Box
"வேலை உறுதியானது, அதிக சம்பளம், வெளிநாட்டில் நிரந்தர குடியுரிமை" போன்ற கவர்ச்சியான வாக்குறுதிகளை அளித்து, பல மாநிலங்களில் உள்ள இளைஞர்களை தங்கள் வலையில் வீழ்த்தினர்.

குஜராத் மட்டுமின்றி காஷ்மீர், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் இவர்களின் மோசடி வேரூன்றியுள்ளது.

வேலை தேடும் இளைஞர்கள் இவர்களை அணுகியவுடன், அவர்கள் முதலில் லட்சக்கணக்கில் முன்பணம் கேட்டுப் பெற்றுள்ளனர்.

அத்துடன், அவர்களின் பாஸ்போர்ட்டுகளையும் பெற்றுக்கொண்டனர். இந்த மோசடி கும்பல், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு விசாக்களை வழங்குவதாகக் கூறினர்.

ஆனால், நாட்கள் மாதங்களாக மாறினாலும், விசா வரவில்லை. இதற்கிடையில், இந்த அப்பா-மகன் இருவரும் தங்கள் அலுவலகங்களை மூடிவிட்டு, தொலைபேசிகளை அணைத்துவிட்டனர்.

மோசடிக்கு ஆளானவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததும், ஹிம்மத்நகர் கிராமப்புற காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

🟥 இந்த SIT குழு தீவிர விசாரணை மற்றும் தேடுதலுக்குப் பிறகு, உத்தரப்பிரதேசத்தின் பிரயாகராஜ் நகரில் பதுங்கியிருந்த சிகந்தர் மற்றும் சமன் ஆகிய இருவரையும் கைது செய்தது.

காவல்துறையின் விரைவான நடவடிக்கை

புகாரின் அடிப்படையில், ஹிம்மத்நகர் துணை கண்காணிப்பாளர் ஏ.கே. படேல் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டது.

இந்த மோசடி வலையமைப்பில் சிக்கந்தரின் மனைவியும் ஒரு இயக்குநராக இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக, அவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீசார், இந்த மோசடி கும்பலுக்கு எதிராகப் போதுமான ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர்.

இந்த விசாரணை இன்னும் தொடர்வதால், இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனவுகள் கலைந்த வாழ்க்கை

இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட பலர், தாங்கள் வேலைக்காகச் சேமித்து வைத்திருந்த பணத்தை இழந்தது மட்டுமின்றி, சில இளைஞர்கள் தங்கள் வீடுகளை விற்றோ அல்லது அதிக கடன் வாங்கியோ பணத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

தங்களுக்கு நேர்ந்த துயரத்தைக் கண்டு, பாதிக்கப்பட்டவர்கள் மாநிலம் முழுவதும் இருந்து இந்த மோசடி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
மோசடி செய்த பணம் மீட்பு : தெலங்கானா சைபர் கிரைம் போலீஸ் கலக்கல்..!
VISA

சிறப்பு விசாரணைக் குழு, விரைவில் மேலும் பலரை கைது செய்ய வாய்ப்புள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு வேலை என்ற பெயரில் நடத்தப்படும் மோசடிகளைத் தடுக்க முடியும் என்று காவல்துறை நம்புகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com