1 வயது குழந்தை செய்த காரியம்! - நாகப்பாம்பு பலி: வெளியான பகீர் தகவல்!

indian baby biting snake
indian baby biting snake
Published on

பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு வினோதமான, அதிர்ச்சியூட்டும் சம்பவம், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வயது குழந்தை ஒன்று, விளையாடும் பொருள் என நினைத்து, இரண்டு அடி நீளமுள்ள ஒரு பாம்பைக் கடித்துக் கொன்றது. இந்தச் சம்பவம், மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் மோஹச்ச்சி பன்கட்வா கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.

கோவிந்த் குமார் என்ற ஒரு வயது குழந்தை, தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு உயிருள்ள நாகப்பாம்பை விளையாட்டுப் பொருள் என நினைத்து கையில் எடுத்துள்ளது. பின்னர், அந்தக் குழந்தை அந்தப் பாம்பைக் கடித்துள்ளது. இதை குழந்தையின் பாட்டி கண்டறிந்து, உடனடியாகத் தலையிடுவதற்குள், பாம்பு கடியால் இறந்து தரையில் கிடந்துள்ளது. அதேசமயம், பாம்பைக் கடித்த குழந்தை மயக்கமடைந்துள்ளது.

உடனடியாகக் குழந்தையின் குடும்பத்தினர், அவனை பெட்டியா நகரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் துவாகந்த் மிஸ்ரா கூறுகையில், குழந்தை மயக்கமடைந்தவுடன் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முதலில் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எங்கள் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தற்போது குழந்தை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், விஷத்தின் அறிகுறிகள் தென்பட்டால் அதற்கான சிகிச்சை தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலமா? இந்த 7 பாம்புகள்ட்ட ஜாக்கிரதை! உயிர் பிழைக்க சில டிப்ஸ்!
indian baby biting snake

கடந்த ஆண்டும் பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள ஜமுஹார் கிராமத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அங்கும் ஒரு வயது குழந்தை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு பாம்பைக் கடித்துக் கொன்றது. அந்த சம்பவத்திலும் பாம்பு உயிரிழந்த நிலையில், குழந்தை ஆபத்தில்லாமல் உயிர் பிழைத்தது. இது குழந்தையின் குடும்பத்தினரையும், மருத்துவர்களையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்தச் சம்பவங்கள், குழந்தைகள் விளையாடும்போது ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகளின் தீவிரத்தை உணர்த்துகின்றன. விளையாட்டுப் பொருள் என நினைத்து ஒரு நாகப்பாம்பைக் கடித்து, அது இறந்து, குழந்தை உயிர் தப்பியது என்பது மருத்துவ உலகிலும், பொதுமக்களிடையேயும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com