

விசில் ஊதினால் சளி பிடிக்காது என்று தவெக மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
விசில் சின்னம்தான் இந்தியாவை நாளை ஆளப்போகிறது. இதை எதற்காக சொல்கிறேன் என்றால்.. குழந்தைக்கு சளி பிடித்திருந்தால் விசில் ஊதினால் போதும் சளி நின்றுவிடும். முதியவர்கள் விசில் அடித்தால் இதயம் நன்றாக வேலை செய்ய ஆரம்பித்து விடும் என்று தவெக பிரச்சாரத்தில் செங்கோட்டையன் பேச்சு அனைவரையும் ரசிக்க வைத்து கைதட்ட செய்தது.