ராகுலுக்கு சிறை தண்டணை வழங்கிய நீதிபதி உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு வழங்கியது ஏன்? உச்ச நீதிமன்றம் வினா!

ராகுலுக்கு சிறை தண்டணை வழங்கிய நீதிபதி உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு வழங்கியது ஏன்? உச்ச நீதிமன்றம் வினா!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘மோடி’ பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்ற நீதிபதி ஹரிஷ் வர்மா உள்ளிட்ட 68 பேருக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையின்பேரில் பதவி உயர்வு வழங்கப்படுவதாக கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி அம்மாநில அரசு அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டது.

இதனை எதிர்த்து குஜராத் நீதித்துறை அதிகாரிகளான ரவிக்குமார் மேத்தா மற்றும் சச்சின் மேத்தா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ‘பணி மூப்பு அடிப்படையை முறையாகப் பின்பற்றாமல் இட ஒதுக்கீடு மூலமாக பதவி உயர்வு வழங்கப்படுவது சட்ட விரோதமானது’ என்று அவர்கள் அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த விவகாரத்தில் அவசர கதியில இந்தப் பதவு உயர்வுகள் வழங்கப்பட்டது ஏன் என்றும், பதவி உயர்வில் சீனியாரிட்டி முறை இதில் பின்பற்றப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த மனு குறித்து மாநில அரசு செயலர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தவிட்டு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

logo
Kalki Online
kalkionline.com