நித்தியானந்தாவின் கைலாசா நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதா நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

நித்தியானந்தாவின் கைலாசா நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதா நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

எப்போதும் தலைப்பு செய்திகளில் வருபவர் தான் நித்தியானந்தா. பாலியல் குற்றச்சாட்டுகளில் பல சாமியார்கள் பெயர் அடிபட்டு கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டுகளாக இந்த குற்றச்சாட்டில் சிக்காமல் இருப்பவர் தான் நித்தியானந்தா. இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டுகளில் இருந்து சிக்கிய நித்தியானந்தா நாட்டை விட்டே வெளியேறி கைலாசா என்ற தனி தீவில் தஞ்சமடைந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அவ்வபோது கைலாசாவில் இருந்து வேலை வாய்ப்பு, ஆலோசனை கூட்டம் என பரபரப்பாகவே ஒரு தகவல் வந்து கொண்டே தான் இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் இந்த கைலாசா நாடு பற்றி தெரிந்துள்ளது.

இந்த நிலையில் கைலாசா நாட்டின் பிரதமர் ரஞ்சிதா என வெளியான தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ரஞ்சிதா 1992ஆம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ஆன்மீகம் மீது கொண்ட நாட்டத்தால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தாவின் சிஷ்யையாக சேர்ந்தார். அப்போது இருந்து தற்போது வரை நித்தியானந்தாவுடன் ஆன்மீக சேவை செய்து வருகிறார்.

தற்போது கைலாசா நாட்டிலும் சேவை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே நித்தியாந்நதாவின் கைலாசா நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல வேலை தேடும் தளமான லிங்க்டு இன் தளத்தில் பக்கத்தில் ரஞ்சிதாவின் புகைப்படம், நித்யானந்தாமாயி சுவாமி என்ற தலைப்பில் பதிவிடப்பட்டு கைலாசாவின் பிரதமர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கைலாசாவின் அலப்பறைகள் தாங்க முடியவில்லை என்றும், தயவு செய்து உங்கள் நாட்டின் ஜனாதிபதி யார் என்று சொல்லிவிடுங்கள் என்றும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் நடிகை ரஞ்சிதா தற்போது நித்தியாந்தாவின் அடுத்த இடத்தில் உள்ளதாகவும், டெக்னிக்கல் தொடர்பான நடவடிக்கைகள் அவர் மூலம் தான் நடக்கிறது என்றும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com