
கடந்த 1மணி நேரமாக இன்று வாட்ஸ்-ஆப் சேவைகள் அனைத்தும் செயல் இழந்து காணப்படுகிறது. வாட்ஸ்-ஆப் செயலி மொபைல்களில் செயல்படவில்லை. அதன் சேவை தற்போது முடங்கிக் கிடக்கிறது.
வாட்ஸ் -ஆப் செயலியில் தகவல்களை அனுப்புவதிலும் பெறுவதிலும் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் வாட்ஸ்-ஆப் பயனாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகிறார்கள்.
நமது அன்றாட வாழ்வில் தகவல் தொடர்பில் முக்கிய அங்கமாக வாட்ஸ்-ஆப் விளங்குகிறது. தற்போது இதன் சேவை முடங்கியதால் பொது மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். தற்போது அலுவலகம், வர்த்தகம் , வணிகம் ஆகிய துறைகளில் வாட்ஸ்-ஆப் பயன்பாடு முடங்கியதால் வேலைகள் ஸம்பித்து நிற்கின்றது.