ஒலியை விட வேகமாக பறக்கும் பிரமோஸ் ஏவுகணை: இந்தியாவின் பரிசோதனை வெற்றி!

ஒலியை விட வேகமாக பறக்கும் பிரமோஸ் ஏவுகணை: இந்தியாவின் பரிசோதனை  வெற்றி!

ஒடிசா மாநிலம் சண்டிபூரில் உள்ள ஏவு தளத்திலிருந்து பரிசோதனை முயர்ஸியாக செலுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை துல்லியமாக பாய்ந்து இலக்கை அழித்து வெற்றியடைந்துள்ளது.

இதுகுறித்து இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO தெரிவித்ததாவது:

இந்தியாவில் ஏற்கனவே பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை முயற்சி வெரற்றியடைந்துள்ளது. ஆனால் இப்போது கூடுதலாக நவீன தொழில் நுட்பங்கள் சேர்க்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியா – ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணை கப்பலையும் நிலப்பகுதியையும் தாக்கும் வகையில் இருவகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, நிலப் பகுதி மற்றும் கடலில் இருந்து ஏவிபரிசோதிக்கப்பட்டது. பிரமோஸ் ஏவுகணை ஏற்கனவே இந்தியராணுவத்திடமும் கடற்படையிடமும் செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில் இனிஅதன்மேம்பட்ட வடிவம் சேர்க்கப்படஉள்ளது.

-இவ்வாறு இந்திய பாதுகாப்புஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com