ஒமைக் ரான் வைரஸ் எதிரொலி: இந்தியாவில் விமான கட்டணங்கள் 2 மடங்கு உயர்வு!

ஒமைக் ரான் வைரஸ் எதிரொலி: இந்தியாவில் விமான கட்டணங்கள் 2 மடங்கு உயர்வு!
Published on

தெனாப்பிரிக்காவில் உருவாகி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தலால், இந்தியாவில் பல்வேறு நாடுகளுக்கான விமான கட்டணங்களை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

.

தென்னாப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பிரிட்டன், ஜெர்மனி, இஸ்ரேல், கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தென்னாப்பிரிக்கா உடனான போக்குவரத்தை நிறுத்திவிட்டன. இந்த வைரஸ் மிகவும் அபாயகரமானது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பதால் அனைத்து நாடுகளும் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு நாடுகளுக்கான விமான கட்டணங்களை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி டெல்லியில் இருந்து கனடாவின் டொரன்டோ நகருக்கு இதுவரை இருந்த குறைந்தபட்ச கட்டணம் 80,000 ரூபாயில் இருந்து 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் இருந்து லண்டனுக்கு இதுவரை 60,000 ரூபாயாக இருந்த பயண கட்டணம், 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிசினஸ் வகுப்பு டிக்கெட்டுகள் ரூ.6 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு நகரங்களுக்கு இடையிலான விமான கட்டணம் 2 முதல் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டண உயர்வு விமான பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com