ஒமிக்ரான் வைரஸ்: நாட்டில் இதுவரை 23 பேர் பாதிப்பு!

ஒமிக்ரான் வைரஸ்: நாட்டில் இதுவரை 23 பேர் பாதிப்பு!

இந்தியாவில் ஒமிக்ரான வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

மகாராஷ்டிராவில் ஓமிக்ரான் வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில பொது சுகாதாரத் துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 25-ம் தேதி தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து மும்பை வந்த 37 வயது நபர், மற்றும் அமெரிக்காவில் இருந்து மும்பை வந்த மற்றொருவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப் பட்டுள்ளது. அவர்கள் இருவரும் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வகையில் கர்நாடகாவில் 2 பேர், குஜராத்தில் ஒருவர், மகாராஷ்டிராவில் 10 பேர், டெல்லியில் ஒருவர், ராஜஸ்தானில் 9 பேர் என நாட்டில் இதுவரை ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு மத்திய அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com