ஓடுபாதையில் விமானம் விழுந்து விபத்து: பயணிகள் பலி!

ஓடுபாதையில் விமானம் விழுந்து விபத்து: பயணிகள் பலி!

டொமினிக்கன் குடியரசு நாட்டில் ஓடுபாதையிலேயே விமானம் விழுந்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலிருந்து டொமினிக்கன் குடியரசு நாட்டின் லா இஸபெல்லா நகருக்கு சென்று கொண்டிருந்த தனியார் விமானம் ஒன்று தலைநகர் சான் டொமிங்கோவில் உள்ள லாஸ் அமெரிக்காஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் அங்கிருந்து புறப்பட்ட போது விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையிலேயே விழுந்தது.
இந்த விபத்தில் 7 பயணிகள் மற்றும் 2 விமானிகள் என அனைவரும் உயிரிழந்தனர். பயணிகளில் ஒருவர் மட்டுமே டொமினிக்கன் குடியரசு நாட்டை சேர்ந்தவர். எஞ்சிய 6 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com