ஆஸ்கார் விருது: இறுதிப் போட்டிப் பட்டியலில் இருந்து வெளியேறியது ‘கூழாங்கல்’!

ஆஸ்கார் விருது: இறுதிப் போட்டிப் பட்டியலில் இருந்து வெளியேறியது ‘கூழாங்கல்’!
Published on

ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பாக அனுப்பப்பட்ட 'கூழாங்கல்' திரைப்படம் அப்போட்டிக்கான இறுதிப் பட்டியலில் தேர்வாகாமல் வெளியறியதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

புதுமுக இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கி, விக்னேஷ் சிவன் தயாரித்த 'கூழாங்கல்' திரைப்படம், ஏற்கனெவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளையும் வென்றது. இந்த நிலையில், வரும் 2022-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. இதையடுத்து ஆஸ்கார் விருதுக்கான போட்டிக்கு இந்தியா சார்பில் 'கூழாங்கல்' படம் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், ஆஸ்காருக்கான இறுதிப் போட்டிப் பட்டியலில் 'கூழாங்கல்' திரைப்படம் இடம்பெறாமல் வெளியேறியது.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் நம் படம் இடம்பெறுவதே பெரிய சாதனை. கூழாங்கல் ஆஸ்கார் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்திருந்தால் எங்களைப் போன்ற சினிமா தயாரிப்பாளர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியும் பெருமையும் இருந்திருக்கும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com