பனீர் பராத்தா

பனீர் பராத்தா

மகாலட்சுமி சுப்பிரமணியன். காரைக்கால்

தேவையானவை :

பனீர்துருவியது-1கப்,

அம்சூர் பவுடர்-1டீஸ்பூன்,

ப மிளகாய்4 (நறுக்கியது),

இஞ்சித்துருவல்-1டீஸ்பூன்,

நறுக்கிய கொத்தமல்லி-3டேபிள்ஸ்பூன்,

கரம்மசாலா தூள்-1டீஸ்பூன்,

மிளகாய்த்தூள்1/2 டீஸ்பூன்,

கோதுமை மாவு2கப்,

சிறுதானியமாவு-3/4 கப்,

உப்புதேவைக்கு.

செய்முறை:

கோதுமை மாவுடன்,சிறுதானியமாவு, உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசறி ,தேவையான தண்ணீர் ஊற்றி பிசையவும்.துருவிய பனீர், இஞ்சி துருவல்,அம்சூர் பவுடர்,உப்பு, ப மிளகாய், கரம்மசாலா தூள், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும். மாவை சிறு உருண்டைகளா க உருட்டி சப்பாத்தி யாக தேய்க்கவும்.அதில் இலேசாக எண்ணெய் தடவி,பனீர் கலவையை நடுவில் வைத்து மூடி, மீண்டும் தேய்த்து ,சூடான தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். தக்காளி,வெங்காய ரைய்தாவுடன் பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com