– ஆர்.ராமலெட்சுமி.l விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது. ஆனால், விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் ஒரு தளம் போடலாம்..l சிவபெருமானுக்குத் தாழம்பூ ஆகாது. தும்பை, வில்வம், கொன்றை ஆகியவை அவருக்கு விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம். விஷ்ணுவை அட்சதையால் அர்ச்சிக்கக் கூடாது..l பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது..l விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம்..l எந்த தெய்வ வழிபாட்டிலும் துலுக்க சாமந்திப் பூவை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது..l அர்ச்சனை செய்யும்போது மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யக்கூடாது..l வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை பூஜைக்கு உபயோகிக்கக் கூடாது..l அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்..l ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. வில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்..l தாமரை, நீலோத்பவம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்தில் இருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதி இல்லை..l வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, தகாதவர்களால் தொடப்பட்டது மற்றும் நுகரப்பட்டது, ஈரத்துணி உடுத்திக்கொண்டு எடுத்து வரப்பட்டது, காய்ந்தது, பழையது, தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாது..l சம்பக மொட்டு தவிர, வேறு மலர்களின் மொட்டுக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல..l வில்வம், துளசியை தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்..l முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை, 'பஞ்ச வில்வம்' எனப்படும். இவை பூஜைக்கு மிக உகந்தவை..l துளசி, முகிழ் (மகிழம்), செண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மரிக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணுகராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலையும் பூஜைக்கு உகந்தவை..பூஜைக்குரிய மலர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விசேஷ பலனைத் தரக்கூடியவை!.l செந்தாமரை – நல்ல தனத்தையும், வியாபார விருத்தியுடன் ஆத்ம பலத்தையும், சூரிய கிரக கடாட்சத்தையும் தரும்..l வெண்தாமரை, வெள்ளை நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி போன்றவை மன சஞ்சலத்தைப் போக்கும்..l மஞ்சள் அரளி, பொன் அரளி மலர்கள் கடன்களைத் தீர்க்கும். கன்னியருக்குத் திருமணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். குரு கிரகப் பீடையை நீக்கும்..l சிவப்பு அரளி தாங்க முடியாத கவலைகளைத் தீர்த்து, குடும்ப ஒற்றுமைையக் கூட்டி வைக்கும்..l நீலச்சங்கு புஷ்பம், நீலக் கனகாம்பரம் போன்றவை அவச்சொற்கள், தீராத அபாண்டங்கள், தரித்திரம் ஆகியவற்றைத் தீர்க்கும். சனி பகவானின் அருளையும் பெற்றுத் தரும். ஆயுளைப் பெருக்கும்..l மனோரஞ்சிதம் தம்பதிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தும்..l பாரிஜாதம், அல்லிப்பூ, மங்கிய வெள்ளைப் புஷ்பங்கள் சிறந்த பக்தியையும், அதிர்ஷ்டங்களையும் தரும். தாயாரின் ஆயுளை விருத்தி செய்யும். சந்திர கிரகப் பிரீதியைத் தரும்..l பாசிப் பச்சையும், மருக்கொழுந்தும் நல்ல விசேஷங்களையும், விவேகத்தையும், சுக போகங்களையும் தரும்..l அடுக்கு, அரளி, செம்பருத்தி போன்றைவ ஞானம், தொழில் விருத்தி ஆகியவற்றைத் தரும்..l வில்வ புஷ்பம், கருந்துளசி புஷ்பம், மகிழ மலர் ஆகியவை ராகு, கேது கிரகங்களின் அருளைப் பெற்றுத் தரும்..l மகாலட்சுமிக்கு பிடித்தமான மலர்கள் செந்தாமரையும், செவ்வந்தியும் ஆகும். செந்தாமரை காலை நேரத்திலும், செவ்வந்தி மாலை நேரத்திலும் மலரும். செல்வம் வற்றாமல் இருக்க இம்மலர்களைக் கொண்டு பூஜை செய்யலாம்..l மல்லிகைப் பூவால் தாயாரை பூஜை செய்தால் மன அமைதி பெறலாம்..l நாகலிங்கப் பூவால் இறைவனை பூஜை செய்தால் லட்சுமி கடாட்சம், ஆரோக்கியம் ஏற்படும்..l வாடாமல்லி பூவால் இறை மூர்த்தங்களை பூஜை செய்தால் மரண பயம் ஒழியும்..l அலரிப் பூவால் பூஜை செய்தால் இன்பம் பெருகும்..l கொடி ரோஜாவால் பூஜை செய்ய, குடும்பப் பிரச்னைகள் தீரும்..l பூஜைக்குப் பயன்படுத்திய பூக்களை மறுநாள் செடி, கொடிகளின் கீழே மண்ணில் போட்டு வைத்தால் நல்ல உரமாகும்.
– ஆர்.ராமலெட்சுமி.l விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது. ஆனால், விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் ஒரு தளம் போடலாம்..l சிவபெருமானுக்குத் தாழம்பூ ஆகாது. தும்பை, வில்வம், கொன்றை ஆகியவை அவருக்கு விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம். விஷ்ணுவை அட்சதையால் அர்ச்சிக்கக் கூடாது..l பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது..l விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம்..l எந்த தெய்வ வழிபாட்டிலும் துலுக்க சாமந்திப் பூவை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது..l அர்ச்சனை செய்யும்போது மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யக்கூடாது..l வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை பூஜைக்கு உபயோகிக்கக் கூடாது..l அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்..l ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. வில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்..l தாமரை, நீலோத்பவம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்தில் இருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதி இல்லை..l வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, தகாதவர்களால் தொடப்பட்டது மற்றும் நுகரப்பட்டது, ஈரத்துணி உடுத்திக்கொண்டு எடுத்து வரப்பட்டது, காய்ந்தது, பழையது, தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாது..l சம்பக மொட்டு தவிர, வேறு மலர்களின் மொட்டுக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல..l வில்வம், துளசியை தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்..l முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை, 'பஞ்ச வில்வம்' எனப்படும். இவை பூஜைக்கு மிக உகந்தவை..l துளசி, முகிழ் (மகிழம்), செண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மரிக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணுகராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலையும் பூஜைக்கு உகந்தவை..பூஜைக்குரிய மலர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விசேஷ பலனைத் தரக்கூடியவை!.l செந்தாமரை – நல்ல தனத்தையும், வியாபார விருத்தியுடன் ஆத்ம பலத்தையும், சூரிய கிரக கடாட்சத்தையும் தரும்..l வெண்தாமரை, வெள்ளை நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி போன்றவை மன சஞ்சலத்தைப் போக்கும்..l மஞ்சள் அரளி, பொன் அரளி மலர்கள் கடன்களைத் தீர்க்கும். கன்னியருக்குத் திருமணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். குரு கிரகப் பீடையை நீக்கும்..l சிவப்பு அரளி தாங்க முடியாத கவலைகளைத் தீர்த்து, குடும்ப ஒற்றுமைையக் கூட்டி வைக்கும்..l நீலச்சங்கு புஷ்பம், நீலக் கனகாம்பரம் போன்றவை அவச்சொற்கள், தீராத அபாண்டங்கள், தரித்திரம் ஆகியவற்றைத் தீர்க்கும். சனி பகவானின் அருளையும் பெற்றுத் தரும். ஆயுளைப் பெருக்கும்..l மனோரஞ்சிதம் தம்பதிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தும்..l பாரிஜாதம், அல்லிப்பூ, மங்கிய வெள்ளைப் புஷ்பங்கள் சிறந்த பக்தியையும், அதிர்ஷ்டங்களையும் தரும். தாயாரின் ஆயுளை விருத்தி செய்யும். சந்திர கிரகப் பிரீதியைத் தரும்..l பாசிப் பச்சையும், மருக்கொழுந்தும் நல்ல விசேஷங்களையும், விவேகத்தையும், சுக போகங்களையும் தரும்..l அடுக்கு, அரளி, செம்பருத்தி போன்றைவ ஞானம், தொழில் விருத்தி ஆகியவற்றைத் தரும்..l வில்வ புஷ்பம், கருந்துளசி புஷ்பம், மகிழ மலர் ஆகியவை ராகு, கேது கிரகங்களின் அருளைப் பெற்றுத் தரும்..l மகாலட்சுமிக்கு பிடித்தமான மலர்கள் செந்தாமரையும், செவ்வந்தியும் ஆகும். செந்தாமரை காலை நேரத்திலும், செவ்வந்தி மாலை நேரத்திலும் மலரும். செல்வம் வற்றாமல் இருக்க இம்மலர்களைக் கொண்டு பூஜை செய்யலாம்..l மல்லிகைப் பூவால் தாயாரை பூஜை செய்தால் மன அமைதி பெறலாம்..l நாகலிங்கப் பூவால் இறைவனை பூஜை செய்தால் லட்சுமி கடாட்சம், ஆரோக்கியம் ஏற்படும்..l வாடாமல்லி பூவால் இறை மூர்த்தங்களை பூஜை செய்தால் மரண பயம் ஒழியும்..l அலரிப் பூவால் பூஜை செய்தால் இன்பம் பெருகும்..l கொடி ரோஜாவால் பூஜை செய்ய, குடும்பப் பிரச்னைகள் தீரும்..l பூஜைக்குப் பயன்படுத்திய பூக்களை மறுநாள் செடி, கொடிகளின் கீழே மண்ணில் போட்டு வைத்தால் நல்ல உரமாகும்.