சுந்தரி காந்தி, பூந்தமல்லி
தேவையானவை:
பப்பாளி விழுது – 1 கp.
சீனி – 3/4 கப்
நெய் – – ¼ கப்
ஏலக்காய் தூள்– சிறிது
முந்தரி – சிறிது
செய்முறை: ஒரு மிக்சியில் தோல் நீக்கிய பப்பாளி சேர்த்து அரைக்கவும். ஒரு நான்ஸ்டிக் கடாயில் கால் கப் நெய் சேர்த்து உருகியவுடன் பப்பாளி விழுது சேர்த்து நன்கு கிளறவும். கட்டிகள் வராமல் இருக்க கைவிடாமல் கிளறவும். நெய் பிரிய தொடங்கும் வரை குறைந்த தீயில் சமைக்கவும். பின்பு இதில் சர்க்கரை சேர்த்து தொடர்ந்து கிளறவும். கடைசியாக அதில் சிட்டிகை ஏலக்காய் தூள் ,வறுத்த முந்தரி சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.