சாமை நூடுல்ஸ்:தேவையானவை : சாமை அரிசி – 5 கப், வெங்காயம் – 2 (நறுக்கியது), தக்காளி – 2, குடைமிளகாய் – 2, முட்டைக்கோஸ் – சிறிதளவு, பச்சை மிளகாய் – 3, எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், கரம் மசாலா பொடி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு..செய்முறை : முதலில் சாமை அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைக்கும்போது அதில் சிறிதளவு உப்பு சேர்த்து அரைக்கவும். பிறகு வாணலியை ஸ்டவ்வில் வைத்து மாவை ஊற்றி, அதில் சிறிதளவு எண்ணெயை ஊற்றிக் கிளறவும்..பிறகு மாவு நிறம் மாறிக் கையில் ஒட்டாமல் பந்துபோல வரும்போது இறக்கவும். அதைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து சூடாக இருக்கும்போதே இடியாப்ப அச்சில் போட்டுப் பிழிந்து வைக்கவும்.பிறகு வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காய்ந்தவுடன், அதில் மெலிதாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், முட்டைக்கோஸ், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, அதில் சிறிது கரம் மசாலா பொடியைத் தூவி, பிழிந்து வைத்திருக்கும் சாமையைப் போட்டுக் கிளறவும். சுவையான சாமை நூடுல்ஸ் தயார்..வெந்தயக்கீரை இட்லி:தேவையானவை : இட்லி மாவு – 4 கப், வெந்தயக்கீரை – 3 கட்டு, பெரிய வெங்காயம் – 2, எலுமிச்சம் பழச்சாறு – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, காய்ந்த மிளகாய் – 8, கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 4 டீஸ்பூன், தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – 3 டீஸ்பூன், நெய் – 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு..செய்முறை : முதலில் ஒரு வாணலியில் காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, தேங்காய் துருவல், சீரகம், பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும். வெந்தயக்கீரையை பொடிப்பொடியாக நறுக்கி அலசிக் கொள்ளவும். பிறகு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.இட்லி மாவை சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.வெங்காயம் நன்கு வதங்கியதும், கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு, பொடித்து வைத்துள்ள பொடியைத் தூவி, அதனுடன் இட்லிகளைச் சேர்த்து, எலுமிச்சம் பழச்சாறு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும். வெந்தயக்கீரை இட்லி தயார்.– ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.மேங்கோ க்ரிஸ்பி பொட்டேடோ:தேவையானவை: மாங்காய் துண்டுகள் – 50 கிராம், வேக வைத்த பேபி உருளைக்கிழங்கு – 150 கிராம், மேங்கோ பல்ப் – 15 மில்லி, எண்ணெய் – 10 மில்லி, சோம்பு, கருஞ்சீரகம் – தலா 3 கிராம், பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட் – தலா 5 கிராம், வெல்லம் – 15 கிராம், கார்னிஷ் செய்ய – 2 வாழை இலை, 10 கிராம் ஓமப் பொடி, உப்பு, பொரிக்க – எண்ணெய்..செய்முறை : உருளைக்கிழங்கை தோல் சீவி பத்து சதவிகிதம் வரை வேகவைத்து ஆற விடவும். பிறகு உருளைக் கிழங்குகளை லைட் பிரவுன் ஆகும் வரை டீப்ஃப்ரை செய்யவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி சோம்பு, கருஞ்சீரகம் போட்டு பிறகு பச்சை மிளகாய் மற்றும் பூண்டு பேஸ்ட் போட்டு ஐந்து நிமிடம் வரை லேசாக மிதமான தீயில் வதக்கி, அதில் வெட்டிய மாங்காய் துண்டுகள், வெல்லம், உப்பு மற்றும் மேங்கோ பல்ப் போட்டு வதக்கி அதில் பொரித்த உருளைக்கிழங்குகளைப் போட்டு மெதுவாகக் கிளறவும். பிறகு பிளேட்டில் வாழை இலைகளை வைத்து அதில் வைத்து பரிமாறவும். மேலே ஓமப் பொடி தூவி கார்னிஷ் செய்யவும்.– எஸ்.ஸ்ருதி, சென்னை
சாமை நூடுல்ஸ்:தேவையானவை : சாமை அரிசி – 5 கப், வெங்காயம் – 2 (நறுக்கியது), தக்காளி – 2, குடைமிளகாய் – 2, முட்டைக்கோஸ் – சிறிதளவு, பச்சை மிளகாய் – 3, எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், கரம் மசாலா பொடி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு..செய்முறை : முதலில் சாமை அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைக்கும்போது அதில் சிறிதளவு உப்பு சேர்த்து அரைக்கவும். பிறகு வாணலியை ஸ்டவ்வில் வைத்து மாவை ஊற்றி, அதில் சிறிதளவு எண்ணெயை ஊற்றிக் கிளறவும்..பிறகு மாவு நிறம் மாறிக் கையில் ஒட்டாமல் பந்துபோல வரும்போது இறக்கவும். அதைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து சூடாக இருக்கும்போதே இடியாப்ப அச்சில் போட்டுப் பிழிந்து வைக்கவும்.பிறகு வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காய்ந்தவுடன், அதில் மெலிதாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், முட்டைக்கோஸ், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, அதில் சிறிது கரம் மசாலா பொடியைத் தூவி, பிழிந்து வைத்திருக்கும் சாமையைப் போட்டுக் கிளறவும். சுவையான சாமை நூடுல்ஸ் தயார்..வெந்தயக்கீரை இட்லி:தேவையானவை : இட்லி மாவு – 4 கப், வெந்தயக்கீரை – 3 கட்டு, பெரிய வெங்காயம் – 2, எலுமிச்சம் பழச்சாறு – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, காய்ந்த மிளகாய் – 8, கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 4 டீஸ்பூன், தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – 3 டீஸ்பூன், நெய் – 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு..செய்முறை : முதலில் ஒரு வாணலியில் காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, தேங்காய் துருவல், சீரகம், பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும். வெந்தயக்கீரையை பொடிப்பொடியாக நறுக்கி அலசிக் கொள்ளவும். பிறகு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.இட்லி மாவை சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.வெங்காயம் நன்கு வதங்கியதும், கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு, பொடித்து வைத்துள்ள பொடியைத் தூவி, அதனுடன் இட்லிகளைச் சேர்த்து, எலுமிச்சம் பழச்சாறு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும். வெந்தயக்கீரை இட்லி தயார்.– ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.மேங்கோ க்ரிஸ்பி பொட்டேடோ:தேவையானவை: மாங்காய் துண்டுகள் – 50 கிராம், வேக வைத்த பேபி உருளைக்கிழங்கு – 150 கிராம், மேங்கோ பல்ப் – 15 மில்லி, எண்ணெய் – 10 மில்லி, சோம்பு, கருஞ்சீரகம் – தலா 3 கிராம், பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட் – தலா 5 கிராம், வெல்லம் – 15 கிராம், கார்னிஷ் செய்ய – 2 வாழை இலை, 10 கிராம் ஓமப் பொடி, உப்பு, பொரிக்க – எண்ணெய்..செய்முறை : உருளைக்கிழங்கை தோல் சீவி பத்து சதவிகிதம் வரை வேகவைத்து ஆற விடவும். பிறகு உருளைக் கிழங்குகளை லைட் பிரவுன் ஆகும் வரை டீப்ஃப்ரை செய்யவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி சோம்பு, கருஞ்சீரகம் போட்டு பிறகு பச்சை மிளகாய் மற்றும் பூண்டு பேஸ்ட் போட்டு ஐந்து நிமிடம் வரை லேசாக மிதமான தீயில் வதக்கி, அதில் வெட்டிய மாங்காய் துண்டுகள், வெல்லம், உப்பு மற்றும் மேங்கோ பல்ப் போட்டு வதக்கி அதில் பொரித்த உருளைக்கிழங்குகளைப் போட்டு மெதுவாகக் கிளறவும். பிறகு பிளேட்டில் வாழை இலைகளை வைத்து அதில் வைத்து பரிமாறவும். மேலே ஓமப் பொடி தூவி கார்னிஷ் செய்யவும்.– எஸ்.ஸ்ருதி, சென்னை