பாலின பேதம் காட்டும் ChatGPT… ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா? 

ChatGPT
ChatGPT
Published on

சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, உரையாடல் மற்றும் பட உருவாக்கம் போன்ற திறன்களால் ChatGPT போன்ற கருவிகள் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. பயனர்கள் கேட்கும் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிப்பதுடன், தற்போது புகைப்படங்களையும் வரைந்து தருவது இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம், கற்பனைத்திறன் மிக்க பலவிதமான காட்சிகளை நம்மால் எளிதாக உருவாக்க முடிகிறது.

இருப்பினும், இந்த அதிநவீன தொழில்நுட்பத்திலும் சில குறைபாடுகள் அவ்வப்போது வெளிவருவதுண்டு. சமீபத்தில் ChatGPT தொடர்பாக எழுந்த ஒரு சர்ச்சை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, பெண்கள் தொடர்பான கவர்ச்சியான புகைப்படங்களை வரைய மறுக்கும் இந்த கருவி, அதேபோன்ற ஆண்களின் புகைப்படங்களை உருவாக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஒரு பயனர் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, பெண்களின் கவர்ச்சியான புகைப்படங்களை உருவாக்குவது அதன் கொள்கைகளுக்கு எதிரானது என்று ChatGPT பதிலளித்துள்ளது. ஆனால், ஆண்களின் கவர்ச்சியான புகைப்படங்களை அது உருவாக்கியுள்ளது. இந்த முரண்பாட்டை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு தொழில்நுட்பம் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுவது சரியா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர். பெண்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், ஆண்களை மட்டும் கவர்ச்சியான தோற்றத்தில் சித்தரிப்பது எந்த வகையில் நியாயம் என்றும் அவர்கள் கேள்வி கேட்கின்றனர். 

இது ஒருதலைப்பட்சமான அணுகுமுறை என்றும், அனைத்து பாலினத்தவருக்கும் ஒரே மாதிரியான கொள்கைகளை ChatGPT கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து ChatGPT நிறுவனத்தின் உரிமையாளர் கருத்து தெரிவிக்கும்போது, இந்த பிழை விரைவில் சரி செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
ChatGPT செயற்கை நுண்ணறிவும், மன அழுத்தமும்… ஒரு ஆழமான கண்ணோட்டம்!
ChatGPT

பொதுவாகவே, செயற்கை நுண்ணறிவு கருவிகள் உருவாக்கப்படும்போது, அவை எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். குறிப்பாக, ஆபாசமான புகைப்படங்கள் போன்ற உணர்திறன் மிக்க விஷயங்களில், பாலினம், வயது போன்ற எந்த வேறுபாடும் காட்டாமல் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியமாகும். 

இந்த தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்வது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு நம் வாழ்வில் மேலும் அதிக முக்கியத்துவம் பெறும் நிலையில், அதன் பயன்பாடு நியாயமானதாகவும், ஒருபக்க சார்பு இல்லாததாகவும் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இதையும் படியுங்கள்:
தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னேற்றத்தை சுருக்கமாகக் காண்போமா?
ChatGPT

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com