வந்தே பாரத் ரயில் எப்படி உருவாக்கப்பட்டது தெரியுமா?

வந்தே பாரத் ரயில் எப்படி உருவாக்கப்பட்டது தெரியுமா?

ணி ஓய்வு பெற வெறும் இரண்டு வருடங்களே இருக்கும் நிலையில், சுதான்ஷு மணியிடம் நீங்கள் உங்களின் இறுதி இரண்டு ஆண்டுகளில் எங்கு பணிபுரிய விரும்புகிறீர்கள் என  ரயில்வே நிர்வாகம் கேட்டதற்கு, அவர் தேர்வு செய்தது சென்னை ICF.

எதுக்குய்யா சென்னைக்கு போகணும்னு அடம் பிடிக்கற? என்ற கேள்வி எழுந்த போது, "பாரதத்துக்காக ஒரு அதிவிரைவு ரயில் உருவாக்கணும். அதுக்கு எனக்கு ஒரு நல்ல டீம் வேணும்" என அவருடைய பதில் இருந்தது. 

அதேநேரத்தில் ஸ்பெயின் நாட்டின் Talgo என்ற நிறுவனம் மணிக்கு 180 கிமீ வேகத்தில், பத்து பெட்டிகள் மட்டுமே கொண்ட ஒரு ரயிலை 250 கோடிக்கு இந்திய ரயில்வேக்கு விற்க ஒப்பந்தம் போட முடிவெடுத்தது. இதில் தொழிற்நுட்பம் சார்ந்த தகவலகள் எதையும் தர மாட்டோம் என்ற நிபந்தனை வேறு போட்டார்கள்.

ஸ்பெயின் நாட்டின் ரயிலை விட சிறப்பான ரயிலை நம்மால் டிசைன் செய்ய முடியும், அதுவும் பாதி விலையில் என மணி கூறியபோது அவரின் ஆர்வத்தைப் பார்த்து, ரயில்வே சேர்மன் ஆச்சரியமடைந்தார்.

நிஜமா? என்ன மணி, நீ ரிடையர் ஆகற நேரத்துல எங்கள வெச்சி காமெடி பண்றியா? சரி, உன்னோட அணிய நீயே தேர்ந்தெடுத்துக்கோ, ஆராய்ச்சிப் பணிக்காக 100 கோடி ஒதுக்கீடு செய்கிறோம் எனக் கூறினார்.

பின்னர் மணி பெட்டி படுக்கையை தூக்கிக்கொண்டு ICF வந்துவிட்டார். அடுத்த இரண்டு வருடத்தில் அவரின் அசுர உழைப்பில் உருவானது தான் இந்த வந்தே பாரத் ரயில். 

16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில், Talgo நிறுவனம் கூறிய அதே 180 கிமீ வேகம் செல்லும். 100 கிமீ வேகம் எடுக்கு வெறும் 54.6 செகண்டில். 180 கிமீ வேகத்தை 145 செகண்டுகளில் எட்டிவிடும். ஸ்பெயின் நிறுவனம் வெறும் 10 கோச்சுகளுக்கு, 250 கோடி ரூபாய் கேட்டது. ஆனால் 97 கோடி ரூபாயில் இந்தியாவிலேயே இது சாத்தியமானது.

அப்படி என்ன புதுமையான டிசைன் இந்த வந்தே பாரத் ரயிலில்?

இந்த ரயிலுக்கு என்று தனியே ஒரு இன்ஜின் தேவையில்லை. ஒவ்வொரு கோச்சும் தன் சுய உந்துதலில் (Self Propellant) முன்னேறும். சுருக்கமா சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு கோச்சிலும் ஒரு மோட்டார் இருக்கும்.

இதில் முதல் ஓட்டம் டில்லியிலிருந்து வாரணாசி வரை வெற்றிகரமாக முடிந்தது. பின்னர் கிழக்கே போன இந்த ரயில், வெற்றிகரமா ஓடிய போதெல்லாம் மணியை யாரும் பாராட்டவில்லை. இவர் யார் என்று கூட ஒருவருக்கும் தெரியவில்லை. 

ஆனால் ஒரு முறை, ஒரு எருமை கூட்டம் தண்டவாளப் பாதையில் வந்து வந்தே பாரத் ரயிலுடன் மோதியவுடன்,

"என்னத்த ரயில் செஞ்சு விட்டிருக்காங்க பாருங்களேன்? தகர டப்பா மாதிரியில்ல இருக்கு?"

"இதை உருவாக்கிய இஞ்சீனியருக்கு எவ்ளோ கமிஷனோ?"

"அந்த காலத்துல, பிரிட்டிஷ்காரன் செஞ்ச ரயில் என்ஜின் இருக்கே! அதுல காண்டாமிருகமே குறுக்கே வந்தாலும், சும்மா தட்டி தூக்கி வீசிட்டு போயிட்டே இருக்கும் தெரியுமா?"

என்ற தகவல்களை சும்மா அள்ளி விட, இணைய ஊடகங்களில் ஏகப்பட்ட சர்ச்சை பேச்சுகள். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தனது டிசைன் எப்படி வேலை செய்யும்? எவ்வளவு மேம்பட்டது? என மணி ஒரு கட்டுரை எழுதினார். 

இந்தியாவில் நம்பி நாராயணண் என்ற விஞ்ஞானி வடிவமைத்த விகாஸ் என்ஜின் தான் செவ்வாய் கிரகம் வரை நமது செயற்கை கோள்களை நிலை நிலைநிறுத்த உதவியது. அவரையும் நாம் 15 வருடம் அல்லாட விட்டோம் என்பதை தெரிந்து கொள்ளவே கொள்ளவே ஒரு திரைப்படம் எடுத்து, காட்ட வேண்டியிருந்தது. நம் நாட்டில் இதுபோன்ற சில நம்பிகள், சிவன்கள், மணிகள் தன்னலம் பாராமல் உழைத்ததாலேயே இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது. குறிப்பாக, இந்த ரயிலை உருவாக்க ரயில்வே நிர்வாகம் ஒதுக்கிய 100 கோடியில், 97 கோடி போக, மீதமுள்ள 3 கோடியை மணி பத்திரமாக திருப்பித் தந்துவிட்டாராம். 

இறுதியில், 2018ல் இந்திய இரயில்வே பணியிலிருந்து முழுமனதோடு ஒய்வு பெற்று, தற்போது லக்னோவில் வசித்து வருகிறார் வந்தே பாரத் ரயிலை உருவாக்கிய சுதான்ஷு மணி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com