கால் பேசும்போது இன்டர்நெட் ஆன்ல வச்சிருக்காதீங்க… ஒரு சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை!

Phone call
Phone call
Published on

இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போனில் 24 மணி நேரமும் இன்டர்நெட் இணைப்புடன் இருப்பது என்பது நம் பெரும்பாலானோரின் பழக்கமாகிவிட்டது. தூங்கும்போது கூட டேட்டா இணைப்பைத் துண்டிப்பதில்லை. ஆனால், நீங்கள் ஒருவரிடம் போன் பேசிக்கொண்டிருக்கும்போது, இன்டர்நெட் இணைப்பை ஆன் செய்து  வைத்திருப்பது, எதிர்பாராத சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு வழிவகுக்கும். இதை இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கமான 'சைபர் தோஸ்த்' சமீபத்தில் எச்சரித்துள்ளது.

இன்டர்நெட் இணைப்புடன் போன் பேசும்போது, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள சில செயலிகள் உங்கள் உரையாடல்களை 'ஒட்டுக் கேட்கும்' வாய்ப்பு உள்ளதாக சைபர் தோஸ்த் தனது எச்சரிக்கை வீடியோவில் குறிப்பிட்டுள்ளது. நாம் ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யும்போது, அந்தச் செயலிக்கு மைக்ரோஃபோனைப் பயன்படுத்த அனுமதி வழங்குமாறு கேட்கும். அவசரத்தில் அல்லது கவனக்குறைவாக நாம் இந்த அனுமதியை வழங்கிவிடுகிறோம்.

இதுவே பிரச்சனைக்கான முக்கிய காரணமாகும். சில செயலிகள், இந்த அனுமதியைப் பயன்படுத்தி, உங்கள் தனிப்பட்ட உரையாடல்களை ஒட்டுக் கேட்டு, அதன் தகவல்களை விளம்பர நோக்கங்களுக்காகவோ அல்லது வேறு தவறான நோக்கங்களுக்காகவோ பயன்படுத்தக்கூடும். இது உங்கள் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால், முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

உங்கள் தனிப்பட்ட உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதைத் தவிர்க்க சில எளிய படிகளைப் பின்பற்றலாம்.

1. ஸ்மார்ட்போன் அமைப்புகள் மூலம்: 

  • உங்கள் ஸ்மார்ட்போனின் ‘Settings’ பகுதிக்குச் செல்லவும். 

  • அங்கு 'Security and Privacy’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். 

  • பின்னர், 'Privacy Control' என்ற பிரிவில் உள்ள ‘Permission Manager’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  • அதில் ‘Microphone’ என்ற விருப்பத்தை கிளிக் செய்தால், எந்தெந்த செயலிகளுக்கு உங்கள் மைக்ரோஃபோனைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது பட்டியலிடப்படும்.

  • இங்கு, உங்களுக்குத் தேவையில்லாத அல்லது சந்தேகப்படும்படியான செயலிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மைக்ரோஃபோன் அனுமதியை நீங்கள் நீக்கலாம்.

இதையும் படியுங்கள்:
கூகிள் குரோம் பயன்படுத்துறீங்களா? போச்சு… மத்திய அரசின் அவசர எச்சரிக்கை!
Phone call

2. கூகிள் குரோம் வழியாக: 

இதற்கு Google Chrome உலாவியைத் திறக்கவும். மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் மெனுவை கிளிக் செய்யவும். அதில் Settings விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, எந்தெந்த வலைத்தளங்கள் அல்லது பயன்பாடுகளுக்கு மைக்ரோஃபோனைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம். இங்கு தேவையான மாற்றங்களைச் செய்வதன் மூலமும் உங்கள் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதைத் தவிர்க்கலாம்.

இந்த எளிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யலாம். ஏனெனில், உங்கள் பேச்சுகள் விளம்பர நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம் என்ற ஆபத்து உள்ளது. உங்கள் சைபர் பாதுகாப்பிற்காக இந்த விஷயத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com