
உங்கள் வீட்டில் மின்விளக்கு இருக்கிறதா?
இருக்கிறது. ஒன்று, இரண்டு இல்லை. பல வடிவங்களில் விதவிதமாக நான்கைந்து மின்விளக்குகள் இருக்கின்றன.
சரி. இவை அனைத்தையும் இயக்குவதற்கான மின்சாரத்தையும் நீங்களே தயாரிக்கிறீர்களா?
இல்லை. அதை அரசாங்கம் தயாரிக்கிறது. நாம், நமக்கு வேண்டிய அளவில் மட்டும் அதை வாங்கிப் பயன்படுத்திக்கொள்கிறோம்.
ஆக, மின்விளக்கை நீங்கள் சொந்தமாக வாங்கிவைத்துள்ளீர்கள். ஏனெனில் அது வீட்டுக்குள்தான் இருக்கவேண்டும், உங்களுக்கு மட்டும்தான் பயன்படவேண்டும். அப்போதுதான் அதன் பலன் (ஒளி) உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும்.
ஆனால், மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை நீங்கள் சொந்தமாக வாங்கவில்லை. ஏனெனில், அதை வாங்குவதற்கு ஏகப்பட்ட செலவாகும். அவ்வளவு பணமோ இடமோ உங்களிடம் இல்லை. அத்துடன், அதை வாங்கினாலும் அவ்வளவு மின்சாரத்தை உங்களால் பயன்படுத்தமுடியாது. அதனால், அது பொதுவான ஓர் இடத்தில் தயாராகிறது. நீங்கள் உங்களுக்கு வேண்டிய அளவில் மட்டும் அங்கிருந்து வாங்கிக்கொள்கிறீர்கள்.