எதற்காக இந்த விண்வெளி மற்றும் பிரபஞ்ச ஆராய்ச்சிகள்?

Space and cosmic research
Space and cosmic research
Published on

பிரபஞ்சத்தை பற்றிய புது தகவல்கள் நாள் ஒன்றுக்கு பலவாய் வந்துகொண்டே இருக்கின்றன. ஒரு தரப்பு இதை வரவேற்றாலும், இன்னொரு தரப்பு இதனால் என்ன தாக்கம் என்று யோசிக்கின்றனர். அப்படி என்ன பயன் இந்த ஆராய்ச்சியில் உள்ளது அதைப் பற்றி தெரிந்துகொள்வோம்:

1. தொழில்நுட்ப அற்புதங்கள்:

விண்வெளி ஆய்வு நமது அன்றாட நடைமுறையில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களோடு கலந்துள்ளது. சாதாரணமாக நீங்கள் உங்கள் ஸ்மார்ட்ஃபோனைக் கவனியுங்கள்... இது விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் செயற்கைக்கோளின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரு பாக்கெட் அளவிலான அதிசய கருவி. GPS வழிசெலுத்தல், வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் Uber சவாரிகள் என்று எல்லாமே மேலே சுற்றும் செயற்கைக்கோள்களைச் சார்ந்துதான் இருக்கின்றன. விண்வெளி ஆய்வுக்காக ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட இந்தச்செயற்கைகோள்கள் (Satellites), இப்போது நகர வீதிகள் மற்றும் கண்டங்கள் முழுவதும் நம்மை வழிநடத்துகின்றன. இறுதியில், ஒரு ஆராய்ச்சி குறித்து விழிப்புணர்வு இருக்கிறதோ இல்லையோ, இந்தக் கண்டுபிடிப்புகள் நம் வாழ்வில் ஓர் அங்கமாக மாறிவிடுகின்றன…

2. உடல்நலம் மற்றும் மருத்துவம்:

விண்வெளி ஆராய்ச்சியானது உடல்நலம் மற்றும் மருத்துவத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்துகிறது. சர்வதேச விண்வெளி நிலையம் (ISS), பூமியிலிருந்து 250 மைல்களுக்கு மேல் சுற்றி வருகிறது. நீண்ட கால நுண் புவியீர்ப்பு(Micro Gravity) ஆய்வுகளுக்கான ஒரு தனித்துவமான ஆய்வகமாக செயல்படுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ்(osteoporosis), தசைக் கோளாறுகள் மற்றும் இதய நோய்களுக்கான சிகிச்சைகள் பற்றிய நுண்ணறிவுகளை ISS இல் உள்ள விஞ்ஞானிகளின் தசைச் சிதைவு, எலும்பு அடர்த்தி இழப்பு மற்றும் இருதய மாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன. மற்றும் மைக்ரோ கிராவிட்டி மூலம் செல் நடத்தையின் புதிய அம்சங்களை வெளிகொண்டு வர முடிகிறது. புற்றுநோய்கான ஆராய்ச்சிகள்கூட விண்வெளி சோதனைகளிலிருந்து நமக்கு சுலபமாகிறது .

3. பூமியின் காலநிலை பாதுகாவலர்கள்:

செயற்கைக்கோள்கள், அமைதியான பாதுகாவலர்கள் போன்றவை, பூமியின் காலநிலையைச் சிறிதும் அசராமல் விழிப்புடன் கண்காணிக்கின்றன. அவை பனிப்பாறைகள் உருகுதல், காடழிப்பு மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவற்றைக் கண்காணிக்கின்றன.

ஆனால், இது சாமானியர்களை எவ்வாறு பாதிக்கிறது? சரி, துல்லியமான வானிலை முன்னறிவிப்புகள் சூறாவளியின்போது உயிர்களைக் காப்பாற்றுகின்றன. பயிர்களை நடவு செய்வதில் விவசாயிகளுக்கு வழிகாட்டுகின்றன. மேலும், விமானப் பாதைகளை மேம்படுத்த விமான நிறுவனங்களுக்கு உதவுகின்றன. செயற்கைக்கோள்கள் தீங்கு விளைவிக்கும் பாசிப் பூக்களைக்(algal blooms) கண்டறிந்து, சமூகங்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்கின்றன.

இதையும் படியுங்கள்:
பூமியில் புவியீர்ப்பு தலைகீழாக வேலை செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? 
Space and cosmic research

4. காஸ்மிக் இன்ஸ்பிரேஷன்(Cosmic Inspiration):

விண்வெளி ஆராய்ச்சி என்பது தரவு மற்றும் சமன்பாடுகளின் (data and equations) சேர்க்கைக்கானது மட்டுமல்ல; ஆச்சரியங்கள் அடங்கிய பல அற்புதங்களை நமக்கு அறிமுகப்படுத்தும் சாதனமும்கூட. ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி, நமது வளிமண்டலத்திற்கு அப்பால் அமைந்துள்ளது. தொலைதூர விண்மீன் திரள்கள், நெபுலாக்கள் மற்றும் நட்சத்திரக் கூட்டங்களின் (நாம் நினைத்தால்கூட நேரில் பார்க்க முடியாத) படங்களைப் பிடிக்கிறது. இந்த காஸ்மிக் படங்கள் பார்க்கும்போது நம் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. படைப்பாற்றலைத் தூண்டுகின்றன. இதைப் பற்றிய அறிவியல் விழிப்புணர்வு இல்லாதவர்கள்கூட இந்தத் தகவல்களால் ஈர்க்கப்படுகின்றனர்.

இதோடு நம் அண்டை கிரகங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை செய்து அதன் மூலம் வரும் தரவுகளை நம் வாழ்வியல் சூழ்நிலைகளோடு புகுத்தி பல ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றனர். குறிப்பாக செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சியில் நம் உலக விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்களை அங்கே அனுப்பி பூமியில் உள்ள சூழ்நிலையை அங்கே பல ஆராய்ச்சிகளை செய்து அதை நடைமுறைப்படுத்துவதே நம் உலகிலுள்ள ஒட்டுமொத்த விஞ்ஞானிகளின் லட்சியம். காரணம் இப்போதைக்கு இந்த பூமி மனிதர்களுக்கு வாழ உகந்தவையாக இருக்கலாம். ஆனால், காலப்போக்கில் இந்த நிலை மாறலாம் என்ற நோக்கத்தில்தான், நிகழ்கால மற்றும் எதிர்கால மனித குலத்தின் அக்கறையின் பேரில் இந்த வகை விண்வெளி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com