எதிர்காலத்தில் ஸ்மார்ட்போனே இருக்காதுன்னு சொன்னா நம்புவீங்களா? 

sam altman
sam altman
Published on

தொலைபேசிகள் உலகத் தகவல் தொடர்பு முறையையே புரட்டிப் போட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம். டெலிபோனில் ஆரம்பித்த இந்த பயணம், பட்டன் போன்கள், ஸ்மார்ட் போன்கள் என இன்று நம் கைகளில் உலகத்தையே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. கம்ப்யூட்டரில் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் ஸ்மார்ட் போன்களில் செய்யும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. ஆனால், இந்த ஸ்மார்ட் போன்களுக்கு முடிவு கட்டும் வகையில், புதிய தொழில்நுட்பம் ஒன்று வெகுவிரைவில் வரப்போகிறது என்ற செய்தி தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய சாதனம் மற்றும் அதன் சிறப்பம்சங்கள்:

ChapGPT-ன் CEO சாம் ஆல்ட்மேன், ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் வடிவமைப்பாளர் ஜானுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய சாதனம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இந்த சாதனம் பயன்பாட்டுக்கு வந்தால், இன்றைய ஸ்மார்ட் போன்களின் தேவை இருக்காது என்று கூறப்படுகிறது. 

இது ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு கருவியாக இருக்கும் என்றும், குரல் கட்டளைக்கு ஏற்ப செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த சாதனத்தை இயக்க டைப் செய்யவோ அல்லது திரையை தொடவோ தேவையில்லை, வெறும் குரல் கட்டளை மூலம் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
டீப்சீக் Vs சாட்ஜிபிடி: செயற்கை நுண்ணறிவுப் போரில் வெல்லப் போவது யார்?
sam altman

யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

தற்போது செயற்கை நுண்ணறிவு செயலிகளை படித்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது. ஆனால், இந்த புதிய சாதனம் படிப்பறிவு இல்லாதவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் எளிமையாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால், நவீன தொழில்நுட்பத்தை கோடிக்கணக்கான மக்களிடம் எளிதில் கொண்டு சேர்க்க முடியும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, கல்வி அறிவு இல்லாதவர்கள் கூட இந்த சாதனத்தை சுலபமாக பயன்படுத்தி பயன் பெற முடியும் என்பது இதன் சிறப்பு.

எப்போது அறிமுகமாகும்?

இந்த புதிய கருவியை வடிவமைக்கும் பணி சில வருடங்களாக நடைபெற்று வருவதாகவும், தற்போது பல்வேறு முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். இன்னும் சில ஆண்டுகளில் இந்த கருவியின் மாதிரி வடிவம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
2,000 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே விலையுள்ள 5 ப்ளூடூத் காலிங் ஸ்மார்ட் வாட்ச்கள்!
sam altman

ஸ்மார்ட் போன்களே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் வந்துவிட்ட இந்த காலத்தில், அவற்றை மிஞ்சும் ஒரு புதிய கருவி வரப்போகிறது என்ற செய்தி ஆச்சரியத்தையும், எதிர்பார்ப்பையும் ஒருங்கே ஏற்படுத்தியுள்ளது. 

இந்த புதிய சாதனம் தகவல் தொடர்பு துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, இது உலக மக்கள் அனைவரையும் தொழில்நுட்பத்துடன் இன்னும் நெருக்கமாக இணைக்கும் ஒரு பாலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com