முருகப்பெருமானை போற்றி வழிபடும் விழாக்களில் கந்த சஷ்டி முக்கியமான திருநாள். இது, முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையைக் கொண்டாடும் ஒரு விழா. சஷ்டி என்றால் ஆறு எனப் பொருள். ஐப்பசி மாதம் சுக்லபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாட்களுமே விரத நாட்களாக அனுசரிக்கப்படுகிறது. ஆறு நாட்கள் நடைபெற்ற சூரசம்ஹாரத்தின் முடிவில் மா மரமாக நின்ற சூரனை, முருகப்பெருமான் தனது சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம், சேவலும் மயிலுமாக மாற, சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். கந்த சஷ்டி ஆறு நாட்களும் பக்தர்கள் விரதமிருந்து அதிகாலையில் நீராடி, பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி வழிபடுவர். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் பால், பழம் மட்டும் அருந்தி ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்..கந்த சஷ்டி விழா என்றவுடனே அனைவரின் நினைவுக்கும் வரும் திருத்தலம் திருச்செந்தூர் ஆகும். இத்தலத்தில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வு உலகப் பிரசித்தம் பெற்றதாகும். முருகப்பெருமானுக்குரிய அறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்த இந்தத் திருத்தலத்தின் சிறப்புகள் சிலவற்றைக் காண்போம்..lதிருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கின்ற னர்.lதிருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு, 'வீரவாகு பட்டினம்' என்றும் ஒரு பெயர் உண்டு. இத்தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடைபெறுகிறது.lமூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப் படுகிறது. சண்முகருக்கு சிவப்பு, பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன.lமூலவருக்குப் பின்புறம் ஒரு சுரங்க அறை உள்ளது. அதன் உள்ளே சென்றால் முருகன் பூஜித்த பஞ்ச லிங்கங்களை தரிசிக்கலாம். இந்த அறைக்கு, 'பாம்பறை' என்றும் ஒரு பெயர் உண்டு.lதிருச்செந்தூர் கோயிலின் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்தக் குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.lதிருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்திநாதர், குமாரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உத்ஸவர்கள் உள்ளனர். இவர்களில் குமாரவிடங்கரை, 'மாப்பிள்ளை சுவாமி' என்று அழைக்கிறார்கள்.lதிருச்செந்தூர் கோயில் கோபுரம் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஒன்பது அடுக்குகளைக் கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.l'திருச்செந்தூர் முருகனே போற்றி' என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83 திருப்புகழ் பாடி உள்ளார். இந்தப் பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்..lதிருச்செந்தூர் கோயில், பிரணவ மந்திரமான, 'ஓம்' எனும் வடிவில் அமைந்துள்ளது.lதிருச்செந்தூர் கோயிலில் உள்ள, 'சண்முக விலாசம்' எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதைத் தாங்குகின்றன.lதிருச்செந்தூர் கோயில் மூலவர் முன் உள்ள இடம், 'மணியடி' எனப்படுகிறது. இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.lநாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.lதமிழகத்தில் முதன் முதலில் நாகரிகம் தோன்றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று.lமுருகப்பெருமானோடு போரிட்ட படை வீரர்கள், 'அய்யனார்கள்' என்று அழைக்கப் பட்டார்கள்.lதிருச்செந்தூர் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.lஇத்திருத்தலம் மன்னார் வளைகுடா கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால், 'அலைவாய்' என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டு, 'திருச்சீரலைவாய்' என்று அழைக்கப்படுகின்றது.lஇக்கோயிலுக்குச் செல்லும் வழியில், தூண்டுகை விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த விநாயகரை வணங்கிய பிறகே முருகப்பெருமானை வணங்கச் செல்ல வேண்டும்.lஇந்தத் திருக்கோயிலில், பன்னிரு சித்தர்களில் எட்டுச் சித்தர்கள் சமாதியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது.lமாமரமாக மாறி நின்ற சூரபத்மனை, முருகப்பெருமானின் வெற்றி வேல் பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில், கடற்கரை ஓரமாக உள்ள, 'மாப்பாடு' என்ற இடம் ஆகும். இப்பகுதி தற்போது, 'மணப்பாடு' என்று அழைக்கப் படுகின்றது.lமுருகனின் அறுபடை வீடுகளில், இது இரண்டாவது படை வீடு எனப்படுகிறது. ஆனால், இதுதான் முதல் படை வீடு என்ற குறிப்புகளும் உள்ளன.lதிருச்செந்தூர் கோயில் ராஜகோபுர வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும், தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்..lதிருச்செந்தூர் கோயிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக மிக முக்கியமான பூஜையாகும்.lகுமரகுருபரர், பகழிக்கூத்தர், ஆதிசங்கரர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட ஏராளமானவர்கள் திருச்செந்தூர் முருகனின் நேரடி அருளைப் பெற்றுள்ளனர்.lவீரபாண்டிய கட்டபொம்மனும் அவர் மனைவி சக்கம்மாவும் செந்திலாண்டவருக்கு ஏராளமான தங்க நகைகளை காணிக்கையாக வழங்கியுள்ளனர்.lமூலவர் தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால், சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.lமுருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருட்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, பேரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினை மாவு ஆகியன இடம்பெறுகின்றன.lஉச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள்.lஇரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர் ஆகியன நிவேதனம் செய்யப்படுகிறது.lசண்முகருக்கு ஆண்டுக்கு 36 திருமுழுக்கு நடைபெறுகிறது. அவை : சித்திரை, ஐப்பசி,தை – 3, ஆடி, தை அமாவாசை – 2, ஆவணி, மாசி திருவிழா – 10, ஐப்பசி, பங்குனி திருக்கல்யாணம் – 2, மாத விசாகம் – 12, ஆனி, தை வருடாபிஷேகம் – 3, தீபாவளி, மகாசிவராத்திரி – 4 என மொத்தம் 36.lதிருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்ததும் கோயில் மணி ஒலிக்கப்பட்ட பிறகே வீரபாண்டிய கட்டபொம்மன் சாப்பிடுவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 250 ஆண்டுகள் பழைமையான, அந்த நூறு கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட மணி தற்போது ராஜகோபுரம் ஒன்பதாம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.lசூரசம்ஹாரம் முடிந்ததும் முருகன் தாமரை மலர் கொண்டு சிவ பூஜை செய்தார். அதை உணர்த்தும் வகையில் இன்றும் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது.lமுதல் ஆறு நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் நடைபெறும். ஏழாம் நாள் முருகன் தெய்வானை திருமணம் நடைபெறும். அதன் பிறகு ஐந்து நாட்கள் கல்யாண ஊஞ்சல் சேவை நடைபெறும்.lதிருச்செந்தூர் கருவறைக்கு எதிரில் இரண்டு மயில்கள் மற்றும் ஒரு நந்தி இருக்கின்றன. அது ஏன் தெரியுமா? முருகனுக்கு ஏற்கெனவே ஒரு மயில் வாகனமாக இருந்து வருகிறது. பின்னர் சூரனை பிளந்ததும், ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவல் கொடியாகவும் ஆனதல்லவா? சூரசம்ஹாரம் முடிந்ததும், ஏற்கெனவே இருந்த மயிலோடு, இந்த மயிலும் (சூரன்) சேர்ந்து வந்து செந்தூரில் இரண்டு மயில்களாக நின்று விட்டன. சூரசம்ஹாரத்திற்கு முன்பு வரை இந்திரனே முருகனுக்கு மயில் வாகனமாக இருந்தான். முருகன் சூரனை வென்ற பின் இந்திரனுக்கு தேவலோக தலைமை பதவியை கொடுத்து அனுப்பிவிட்டு, மயிலாக மாறிய சூரனையே தனது வாகனமாகக் கொண்டார் முருகன். பஞ்ச லிங்கங்களை வைத்து முருகன் பூஜை செய்யும் கோலத்தில் சிவனுடன் இருக்கிறார். எனவே, சிவனுக்குரிய நந்தி, மயில்களுடன் சேர்ந்து கருவறைக்கு எதிரே இருக்கிறது.lஆவணி திருவிழாவின்போது முருகப்பெருமான், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாகக் காட்சி தருகிறார்.lதிருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு, 'கங்கை பூஜை' என்று பெயர்.lகோயில் திருப்பணி செய்த துறவிகளில் காசி சுவாமி கி.பி.1882ல் வசந்த மண்டபம் கட்டினார். மவுன சாமி 1895ல் மண்டபத்தைக் கட்டி முடித்தார். வள்ளிநாயக சுவாமி கிரி பிராகாரத்துக்கு தகரக் கொட்டகை அமைத்தார். ஆறுமுக சுவாமி கோயிலுக்குள் கருங்கல் தூண்களை அமைத்தார். தேசியமூர்த்தி சுவாமி ராஜகோபுரத்தைக் கட்டினார்.lதிருச்செந்தூர் கோயில் தங்கத் தேரில் அறுங்கோண வடிவில் அறுபடை வீட்டு முருகன் சிலைகள் உள்ளன.lசஷ்டி தகடுகளில் எழுதப்பட்ட மந்திரம், 'ஓம் சரவண பவ' என்பதாகும்.lதிருச்செந்தூர் தலத்தில் பழங்காலத்தில் பல மணற்குன்றுகள் முருகனது சிறிய சன்னிதியைச் சூழ்ந்திருக்க வேண்டும். அவற்றுள் பெரிய மணற்குன்று ஒன்றை, 'கந்தமாதன பர்வதம்' என்ற பெயரால் குறித்திருக்க வேண்டும். நாளடைவில் மணற் குன்றுகள் தேய்ந்து தேய்ந்து பிராகாரங்கள் ஆகியிருக்க வேண்டும். வடக்குப் பக்கத்தில் மணற்குன்றே ஒரு மதிலாக அமைந்திருப்பதை இப்போதும் காணலாம். இம்மணற்குன்றின் தாழ்வறையில்தான் ரங்கநாதப் பெருமாள் பள்ளிகொண்டிருக்கிறார்.l'திருச்செந்தூரில் ஒரு தின உபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை. இச்சரிதத்தை எழுதுவோரும் படிப்போரும் கேட்போரும் நீங்காத செல்வங்களைப் பெற்று வாழ்ந்திருப்பர்' என்று சூதம முனிவர் உரைத்தருளி உள்ளார்..– தொகுப்பு : எம்.அசோக்ராஜா
முருகப்பெருமானை போற்றி வழிபடும் விழாக்களில் கந்த சஷ்டி முக்கியமான திருநாள். இது, முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையைக் கொண்டாடும் ஒரு விழா. சஷ்டி என்றால் ஆறு எனப் பொருள். ஐப்பசி மாதம் சுக்லபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாட்களுமே விரத நாட்களாக அனுசரிக்கப்படுகிறது. ஆறு நாட்கள் நடைபெற்ற சூரசம்ஹாரத்தின் முடிவில் மா மரமாக நின்ற சூரனை, முருகப்பெருமான் தனது சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம், சேவலும் மயிலுமாக மாற, சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். கந்த சஷ்டி ஆறு நாட்களும் பக்தர்கள் விரதமிருந்து அதிகாலையில் நீராடி, பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி வழிபடுவர். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் பால், பழம் மட்டும் அருந்தி ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்..கந்த சஷ்டி விழா என்றவுடனே அனைவரின் நினைவுக்கும் வரும் திருத்தலம் திருச்செந்தூர் ஆகும். இத்தலத்தில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வு உலகப் பிரசித்தம் பெற்றதாகும். முருகப்பெருமானுக்குரிய அறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்த இந்தத் திருத்தலத்தின் சிறப்புகள் சிலவற்றைக் காண்போம்..lதிருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கின்ற னர்.lதிருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு, 'வீரவாகு பட்டினம்' என்றும் ஒரு பெயர் உண்டு. இத்தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடைபெறுகிறது.lமூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப் படுகிறது. சண்முகருக்கு சிவப்பு, பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன.lமூலவருக்குப் பின்புறம் ஒரு சுரங்க அறை உள்ளது. அதன் உள்ளே சென்றால் முருகன் பூஜித்த பஞ்ச லிங்கங்களை தரிசிக்கலாம். இந்த அறைக்கு, 'பாம்பறை' என்றும் ஒரு பெயர் உண்டு.lதிருச்செந்தூர் கோயிலின் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்தக் குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.lதிருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்திநாதர், குமாரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உத்ஸவர்கள் உள்ளனர். இவர்களில் குமாரவிடங்கரை, 'மாப்பிள்ளை சுவாமி' என்று அழைக்கிறார்கள்.lதிருச்செந்தூர் கோயில் கோபுரம் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஒன்பது அடுக்குகளைக் கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.l'திருச்செந்தூர் முருகனே போற்றி' என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83 திருப்புகழ் பாடி உள்ளார். இந்தப் பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்..lதிருச்செந்தூர் கோயில், பிரணவ மந்திரமான, 'ஓம்' எனும் வடிவில் அமைந்துள்ளது.lதிருச்செந்தூர் கோயிலில் உள்ள, 'சண்முக விலாசம்' எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதைத் தாங்குகின்றன.lதிருச்செந்தூர் கோயில் மூலவர் முன் உள்ள இடம், 'மணியடி' எனப்படுகிறது. இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.lநாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.lதமிழகத்தில் முதன் முதலில் நாகரிகம் தோன்றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று.lமுருகப்பெருமானோடு போரிட்ட படை வீரர்கள், 'அய்யனார்கள்' என்று அழைக்கப் பட்டார்கள்.lதிருச்செந்தூர் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.lஇத்திருத்தலம் மன்னார் வளைகுடா கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால், 'அலைவாய்' என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டு, 'திருச்சீரலைவாய்' என்று அழைக்கப்படுகின்றது.lஇக்கோயிலுக்குச் செல்லும் வழியில், தூண்டுகை விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த விநாயகரை வணங்கிய பிறகே முருகப்பெருமானை வணங்கச் செல்ல வேண்டும்.lஇந்தத் திருக்கோயிலில், பன்னிரு சித்தர்களில் எட்டுச் சித்தர்கள் சமாதியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது.lமாமரமாக மாறி நின்ற சூரபத்மனை, முருகப்பெருமானின் வெற்றி வேல் பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில், கடற்கரை ஓரமாக உள்ள, 'மாப்பாடு' என்ற இடம் ஆகும். இப்பகுதி தற்போது, 'மணப்பாடு' என்று அழைக்கப் படுகின்றது.lமுருகனின் அறுபடை வீடுகளில், இது இரண்டாவது படை வீடு எனப்படுகிறது. ஆனால், இதுதான் முதல் படை வீடு என்ற குறிப்புகளும் உள்ளன.lதிருச்செந்தூர் கோயில் ராஜகோபுர வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும், தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்..lதிருச்செந்தூர் கோயிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக மிக முக்கியமான பூஜையாகும்.lகுமரகுருபரர், பகழிக்கூத்தர், ஆதிசங்கரர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட ஏராளமானவர்கள் திருச்செந்தூர் முருகனின் நேரடி அருளைப் பெற்றுள்ளனர்.lவீரபாண்டிய கட்டபொம்மனும் அவர் மனைவி சக்கம்மாவும் செந்திலாண்டவருக்கு ஏராளமான தங்க நகைகளை காணிக்கையாக வழங்கியுள்ளனர்.lமூலவர் தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால், சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.lமுருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருட்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, பேரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினை மாவு ஆகியன இடம்பெறுகின்றன.lஉச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள்.lஇரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர் ஆகியன நிவேதனம் செய்யப்படுகிறது.lசண்முகருக்கு ஆண்டுக்கு 36 திருமுழுக்கு நடைபெறுகிறது. அவை : சித்திரை, ஐப்பசி,தை – 3, ஆடி, தை அமாவாசை – 2, ஆவணி, மாசி திருவிழா – 10, ஐப்பசி, பங்குனி திருக்கல்யாணம் – 2, மாத விசாகம் – 12, ஆனி, தை வருடாபிஷேகம் – 3, தீபாவளி, மகாசிவராத்திரி – 4 என மொத்தம் 36.lதிருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்ததும் கோயில் மணி ஒலிக்கப்பட்ட பிறகே வீரபாண்டிய கட்டபொம்மன் சாப்பிடுவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 250 ஆண்டுகள் பழைமையான, அந்த நூறு கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட மணி தற்போது ராஜகோபுரம் ஒன்பதாம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.lசூரசம்ஹாரம் முடிந்ததும் முருகன் தாமரை மலர் கொண்டு சிவ பூஜை செய்தார். அதை உணர்த்தும் வகையில் இன்றும் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது.lமுதல் ஆறு நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் நடைபெறும். ஏழாம் நாள் முருகன் தெய்வானை திருமணம் நடைபெறும். அதன் பிறகு ஐந்து நாட்கள் கல்யாண ஊஞ்சல் சேவை நடைபெறும்.lதிருச்செந்தூர் கருவறைக்கு எதிரில் இரண்டு மயில்கள் மற்றும் ஒரு நந்தி இருக்கின்றன. அது ஏன் தெரியுமா? முருகனுக்கு ஏற்கெனவே ஒரு மயில் வாகனமாக இருந்து வருகிறது. பின்னர் சூரனை பிளந்ததும், ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவல் கொடியாகவும் ஆனதல்லவா? சூரசம்ஹாரம் முடிந்ததும், ஏற்கெனவே இருந்த மயிலோடு, இந்த மயிலும் (சூரன்) சேர்ந்து வந்து செந்தூரில் இரண்டு மயில்களாக நின்று விட்டன. சூரசம்ஹாரத்திற்கு முன்பு வரை இந்திரனே முருகனுக்கு மயில் வாகனமாக இருந்தான். முருகன் சூரனை வென்ற பின் இந்திரனுக்கு தேவலோக தலைமை பதவியை கொடுத்து அனுப்பிவிட்டு, மயிலாக மாறிய சூரனையே தனது வாகனமாகக் கொண்டார் முருகன். பஞ்ச லிங்கங்களை வைத்து முருகன் பூஜை செய்யும் கோலத்தில் சிவனுடன் இருக்கிறார். எனவே, சிவனுக்குரிய நந்தி, மயில்களுடன் சேர்ந்து கருவறைக்கு எதிரே இருக்கிறது.lஆவணி திருவிழாவின்போது முருகப்பெருமான், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாகக் காட்சி தருகிறார்.lதிருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு, 'கங்கை பூஜை' என்று பெயர்.lகோயில் திருப்பணி செய்த துறவிகளில் காசி சுவாமி கி.பி.1882ல் வசந்த மண்டபம் கட்டினார். மவுன சாமி 1895ல் மண்டபத்தைக் கட்டி முடித்தார். வள்ளிநாயக சுவாமி கிரி பிராகாரத்துக்கு தகரக் கொட்டகை அமைத்தார். ஆறுமுக சுவாமி கோயிலுக்குள் கருங்கல் தூண்களை அமைத்தார். தேசியமூர்த்தி சுவாமி ராஜகோபுரத்தைக் கட்டினார்.lதிருச்செந்தூர் கோயில் தங்கத் தேரில் அறுங்கோண வடிவில் அறுபடை வீட்டு முருகன் சிலைகள் உள்ளன.lசஷ்டி தகடுகளில் எழுதப்பட்ட மந்திரம், 'ஓம் சரவண பவ' என்பதாகும்.lதிருச்செந்தூர் தலத்தில் பழங்காலத்தில் பல மணற்குன்றுகள் முருகனது சிறிய சன்னிதியைச் சூழ்ந்திருக்க வேண்டும். அவற்றுள் பெரிய மணற்குன்று ஒன்றை, 'கந்தமாதன பர்வதம்' என்ற பெயரால் குறித்திருக்க வேண்டும். நாளடைவில் மணற் குன்றுகள் தேய்ந்து தேய்ந்து பிராகாரங்கள் ஆகியிருக்க வேண்டும். வடக்குப் பக்கத்தில் மணற்குன்றே ஒரு மதிலாக அமைந்திருப்பதை இப்போதும் காணலாம். இம்மணற்குன்றின் தாழ்வறையில்தான் ரங்கநாதப் பெருமாள் பள்ளிகொண்டிருக்கிறார்.l'திருச்செந்தூரில் ஒரு தின உபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை. இச்சரிதத்தை எழுதுவோரும் படிப்போரும் கேட்போரும் நீங்காத செல்வங்களைப் பெற்று வாழ்ந்திருப்பர்' என்று சூதம முனிவர் உரைத்தருளி உள்ளார்..– தொகுப்பு : எம்.அசோக்ராஜா