பாகம் -18 - சுசீலா மாணிக்கம் ஓவியம்; பத்மவாசன் பெருநாவலராம் நம் திருவள்ளுவப்பெருமானின் “வள்ளுவன் வாய்ச் சொல்லாம்” திருக்குறளில் பதினெட்டாம் அதிகாரம் வெஃகாமை. பிறன் பொருளை விரும்பாதிருத்தல் அறம் - என்பதுதான் இவ்அதிகாரம் வலியுறுத்தும் கருத்து. அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் அருளை விரும்பி அறநெறியில் நின்றவன் பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான். நம் கனவுக்காவியமாம் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களில் எப்போதும் எனக்குள் பரிதாப உணர்வை ஏற்படுத்தும் மாபெரும் வீரர் - பதினாறாம் அகவை கூட நிறைவுறாத போதும் சேவூர் போரில் மாபெரும் சைனியத்தை வெற்றி கண்ட கோப்பரக் கேசரி ஆதித்த கரிகாலர்தான்.அவர் கோபத்தில் வெகுண்ட தருணம், சூழ்நிலையையும் தன்னிலையையும் மறந்த நேரம், என்னதான் போர் என்பது அக்கால வீர மரபுகளில் ஒன்றாகக் கருதப்பட்டாலும், ஆதரவற்ற ஓர் அபலை பெண்ணின் கண்ணீருக்கும் கதறலுக்கும் செவிசாய்க்காமல், உயிருள்ள ஓர் மனிதரை ‘எனது பொருள்’ எனச் சொந்தம் கொண்டாடிய அப்பெண்ணுக்கு முன்னே ஆதித்த கரிகாலன் செய்த ஒரே ஓர் செயல்தான் நம் பொன்னியின் செல்வன் புதினத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னேயும், ஒவ்வொரு நிகழ்வின் போதும் தொக்கி மறைந்து அச்சமூட்டி கொண்டே வரும். “வீரபாண்டியன் தலை கொண்ட” தருணத்தைத்தான் சொல்கிறேன்.ஆதித்த கரிகாலன் எனும் பெயரைக் கேட்டவுடனேயே என் இதயம் உருகும். மனம் கனமாகும். இத்தகையக் கொடுஞ்செயலை அவர் ஏன் செய்தார் என அந்த வீரத் திருமகனிடமே கேட்போம் வாருங்கள்... (தனது உயிர் நண்பர்களுள் ஒருவரான பார்த்திபேந்திரனிடம் ஆதித்த கரிகாலர்...) “மீனக் கொடியைப் பார்த்து நாம் ஏமாந்துபோனோம். மீனக் கொடியைத் தாங்கிக்கொண்டு யானை ஒன்று நின்றது. ஆனால் அதன் பேரிலோ, பக்கத்திலோ பாண்டிய மன்னனைக் காணவில்லை! வீரபாண்டியன் போர்க் களத்திலிருந்து தப்பி ஓடி ஒளிந்துகொள்ளுவதில் சமர்த்தன் அல்லவா? இப்போதும் அவன் ஓடியிருக்கலாம் என்று சந்தேகித்துப் படைகளைப் பிரித்து நாலா புறமும் அனுப்பினோம். "வைகை நதியின் இரு கரைகளோடு நீங்கள் எல்லோரும் விரைந்து சென்றீர்கள். நானும் சும்மா இருக்கவில்லை. வைகை நதியில் இறங்கி மணலில் நடந்து தெற்கே சென்றேன். ஒரு தனிக் குதிரையின் குளம்படி, மணலில் சில இடங்களில் பதிந்திருந்தது. குதிரை போன வழியில் மணலில் இரத்தக் கறையும் காணப்பட்டது. அதைப் பிடித்துக்கொண்டு நான் போனேன். வைகையாற்றின் மத்தியில் ஒரு தீவு போல் அமைந்திருந்த சோலையை அடைந்தேன். அந்தச் சோலைக்குள்ளே திருமாலின் கோயில் ஒன்றிருந்தது. அதையொட்டி இரண்டொரு அர்ச்சகர் வீடுகள் இருந்தன. பெருமாள் பூஜைக்குரிய பூ மரங்கள் அச்சோலையில் ஏராளமாக இருந்தன. ஒரு சிறிய தாமரைக் குளம் பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தது. "இப்படி நான் தீர்மானித்திருந்த நிலையில், ஒற்றைக் குதிரையின் குளம்படி அந்தச் சோலைக்குள்ளே போயிருப்பதைக் கண்டதும் அளவிலாத வியப்பும், ஆத்திரமும் கொண்டேன். மேலும் சென்று பார்த்தபோது, அடர்ந்த மரங்களின் மறைவில் குதிரை கட்டியிருப்பதைக் கண்டேன். எனவே, தப்பி வந்தவன் அந்தக் குடிசை வீடுகளில் ஒன்றில்தான் இருக்கவேண்டும். நந்தினியின் வீட்டுக்குச் சென்று பலகணி வழியாகப் பார்த்தேன். நண்பா! அங்கே நான் கண்ட காட்சி பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் என் நெஞ்சில் தீட்டியதுபோலப் பதிந்திருக்கிறது. ஒரு பழைய கயிற்றுக்கட்டிலில் வீரபாண்டியன் படுத்துக் கிடந்தான். நந்தினி அவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்துக் குடிக்கச் செய்தாள். அவள் முகம் முன் எப்போதுமில்லாத காந்தியுடன் ஜொலித்தது. அவள் கண்களில் இரண்டு துளிக் கண்ணீர் ததும்பி நின்றது. என்னை மீறி வந்த ஆத்திரத்துடன் கதவைப் படார் என்று உதைத்துத் திறந்துகொண்டு உள்ளே போனேன். காயங்களைக் கட்டிக்கொண்டிருந்த நந்தினி என்னைக் கண்டதும் அதை நிறுத்திவிட்டு முன்னால் வந்தாள். சாஷ்டாங்கமாக என்னை நமஸ்கரித்து எழுத்தாள். கைகூப்பிய வண்ணம் 'ஐயா! நீங்கள் என் பேரில் வைத்திருந்த அன்பின்மேல் ஆணையிட்டு வேண்டுகிறேன். இவரை ஒன்றும் செய்யாதீர்கள்! படுகாயப் பட்டுக் கிடக்கும் இவரை உங்கள் கையால் கொல்ல வேண்டாம்!” என்றாள். “நான் தட்டுத்தடுமாறி ‘உனக்கும் இந்த மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக இவன் உயிரைக் காப்பாற்றும்படி கேட்கிறாய்?' என்றேன். "இவர் என் காதலர்; இவர் என் தெய்வம்; இவர் என்னை மணந்துக் கொள்ளச் சம்மதித்திருக்கும் தயாளன்!" என்றாள்.. "காயம்பட்டிருந்த வீரபாண்டியனைப் பார்த்துக் கொஞ்சம் உண்டாகியிருந்த இரக்கமும் என்னிடமிருந்து அகன்றுவிட்டது. பாதகன், சண்டாளன், எப்படி என்னைப் பழி வாங்கிவிட்டான்! என் இராஜ்யத்தையே கைப்பற்றியிருந்தாலும் பாதகம் இல்லை. என் உள்ளத்தில் குடிக்கொண்டிருந்த பெண்ணரசியையல்லவா அபகரித்துவிட்டான்? இவனிடம் எப்படி இரக்கம் காட்ட முடியும்? முடியவே முடியாது! "நந்தினியை உதைத்துத் தள்ளிவிட்டு அவளைத் தாண்டிக்கொண்டு சென்று வாளின் ஒரே வீச்சில் வீர பாண்டியனுடைய தலையை வெட்டி வீழ்த்தினேன். அந்த மூர்க்க பயங்கரச் செயலை நினைத்துப் பார்த்தால் எனக்கு வெட்கமாயிருக்கிறது. ஆனால், அச்சமயம் யுத்த வெறியோடு கூடக் குரோத வெறியும் என்னைப் பிடித்திருந்தது. அந்த ஆவேசத்தில் பாண்டியனைக் கொன்றுவிட்டு அந்த வீட்டின் வாசற்படியை தாண்டும் போது நந்தினியை ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். அவளும் என்னைக் கண் கொட்டாமல் பார்த்தாள். அதைப் போன்ற பார்வை இந்தப் பூவுலகில் நான் கண்டதில்லை. அதில் காமக் குரோத லோப மோக மத மாற்சரியம் என்னும் ஆறு வித உணர்ச்சிகளும் அத்தனை நெருப்பு ஜுவாலைகளாகக் கொழுந்துவிட்டு எரிந்தன. அதன் பொருள் என்னவென்று எத்தனையோ தடவை எண்ணியெண்ணிப் பார்த்தும் எனக்கு இன்று வரை தெரியவில்லை! “அதற்குள் என்னைத் தேடிக்கொண்டு நீயும் இன்னும் பலரும் வந்து விட்டீர்கள் .வீரபாண்டியனுடைய தலையற்ற உடலையும் ரத்தம் சிந்திய தலையையும் பார்த்துவிட்டு எல்லோரும் ஜயகோஷம் செய்தீர்கள். ஆனால் என்னுடைய நெஞ்சில் விந்திய பர்வதத்தை வைத்ததுபோல் ஒரு பெரும் பாரம் அமுக்கிக் கொண்டிருந்தது!....” (பார்த்திபேந்திரனின் மறுமொழி) “இப்போது எனக்குக் கூட ஞாபகம் வருகிறது, அரசே! அந்தக் குடிசையின் வாசலில் தாங்கள் வீரபாண்டியன் உடலைத் தூக்கிக்கொண்டு வந்து போட்டீர்கள். நாங்கள் அனைவரும் வெறி கொண்டவர்களைப் போல் வெற்றி முழக்கம் செய்தோம். அதற்கு நடுவில் குடிசைக் குள்ளேயிருந்து விம்மல் சத்தம் ஒன்று வந்தது. ‘அது யார்?’ என்று நான் கேட்டேன். யாரோ அர்ச்சகர் குடும்பத்துப் பெண்கள். ஏற்கெனவே அவர்கள் பீதியடைந்து கதிகலங்கிப் போயிருக்கிறார்கள். நீங்கள் யாரும் உள்ளே போக வேண்டாம்!' என்றீர்கள். வெற்றி வெறியில் இருந்த நாங்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. உடனே எல்லாருமாக வீரபாண்டியனுடைய தலையை எடுத்துக் கொண்டு கிளம்பினோம். தாங்களும் எங்களுடன் வந்தீர்கள். ஆனால், எங்கள் களிப்பிலும் கொண்டாட்டத்திலும் அவ்வளவாகத் தாங்கள் கலந்து கொள்ளவில்லை. உற்சாகம் குன்றிக் காணப்பட்டீர்கள். நான் காரணம் கேட்டேன். தாங்கள் ஏதோ சமாதானம் சொன்னீர்கள். தங்களுக்கு ஏதேனும் பலமான காயம் பட்டிருக்குமோ என்று நான் சந்தேகித்துக் கேட்டதுகூட எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது!" என்றான் பார்த்திபேந்திரன். (ஆதித்த கரிகாலர் மறுமொழி) "என் உடம்பில் ஒன்றும் காயம் படவில்லை. பார்த்திபா! உள்ளத்தில் என்றும் ஆறாத காயம்பட்டுவிட்டது. வீரபாண்டியன் படுத்துக்கிடந்த கட்டிலுக்கு முன்னால் வந்து அவள் கைகூப்பி என்னிடம் உயிர்ப்பிச்சை கேட்ட காட்சி என் மனத்தை விட்டு அகலவில்லை. ‘ஐயோ! அவள் கேட்டதைக் கொடுக்காமல் போய் விட்டோமே!’ என்று என் மனம் பதைபதைத்தது. என் உயிரைக் கொடுப்பதின் மூலம் வீரபாண்டியனை உயிர்ப்பித்து அவளிடம் சேர்க்க முடியுமானால் அப்படியே நான் செய்திருப்பேன். இது முடியாதபடியால் என்னை நானே நொந்துகொண்டேன். என்னை நானே சபித்துக்கொண்டேன்.” (இப்பதிவின் ஆரம்பத்தில் நான் கூறியதுபோல நந்தினி சொந்தம் கொண்டாடியதை, அது பொருளாய் இருந்தால் என்ன? உறவாய் இருந்தால் என்ன! அப்படியே விட்டு விட்டு திரும்பிப்பார்க்காமல் போயிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என என் மனமும் அடிக்கடி வருந்தும். சில நேரங்களில் கன்னத்தில் கை வைத்தபடி ஓரிடத்தில் உட்கார்ந்துகொள்ளும்) "திடீர் என்று ஒரு நாள் ஆதித்தகரிகாலன் இறந்து விட்டான் என்றும், சம்புவரையரின் மாளிகையில் வஞ்சனையினால் கொல்லப்பட்டான் என்றும் செய்தி பரவவே, சோழநாட்டு மக்களின் உள்ளக் கிளர்ச்சி எப்படியிருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை அல்லவா? அந்த வீர புருஷனுக்கு இறுதி மரியாதை செய்வதற்கு லட்சக் கணக்கிலே திரண்டு வந்து சேர்ந்ததிலும் வியப்பில்லைதானே?.ஊர்வலம் தஞ்சையை அணுகியபோது, ஜனக்கூட்டம் ஜன சமுத்திரமாகவே ஆகிவிட்டது. தஞ்சை நகர மக்களும் தஞ்சைக் கோட்டையைச் சுற்றிலும் சூழ்ந்திருந்த தென் திசைப்படை வீரர்களும் கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து விட்டார்கள். அவர்களையெல்லாம் கோட்டைக்குள் அனுமதித்தால் பல விபரீதங்கள் நேரிடலாம் என்று முதன் மந்திரி அநிருத்தர் எச்சரித்ததின் பேரில், துயரக் கடலில் மூழ்கியிருந்த சக்கரவர்த்தியும் அவருடைய குடும்பத்தாரும் கோட்டைக்கு வெளியிலேயே வந்துவிட்டார்கள். சுந்தர சோழரைப் பார்த்ததும், அந்த மாபெரும் கூட்டத்தில் ஒரு பேரிரைச்சல் எழுந்தது. "சோழ நாட்டைச் சுந்தர சோழர் அரசு புரிந்தபோது 'ஹா' என்ற சத்தமே கேட்டதில்லை." என்று சிலா சாசனங்கள் சொல்லு கின்றன. ஆதித்த கரிகாலரின் மரணத்துக்கு முன்னால் குடிகொண்டிருந்த நிலைமை அச் சிலா சாசனங்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கோ “ஹா! ஹா!” “ஐயையோ!” என்ற சத்தங்கள் லட்சணக்கான குரல்களில் எழுந்தன. அபிமன்யுவைப் பறி கொடுத்த அர்ச்சுனனுடைய நினைவு அநேகருக்கு வந்தது.(தொடரத்தான் நினைக்கிறேன். இயலவில்லை... சற்றுப் பொறுங்கள் நண்பர்களே... மனதைச் சற்று ஆசுவாசப் படுத்திக்கொண்டு வந்து விடுகிறேன். அடுத்தப் பதிவில் சந்திப்போம்...)
பாகம் -18 - சுசீலா மாணிக்கம் ஓவியம்; பத்மவாசன் பெருநாவலராம் நம் திருவள்ளுவப்பெருமானின் “வள்ளுவன் வாய்ச் சொல்லாம்” திருக்குறளில் பதினெட்டாம் அதிகாரம் வெஃகாமை. பிறன் பொருளை விரும்பாதிருத்தல் அறம் - என்பதுதான் இவ்அதிகாரம் வலியுறுத்தும் கருத்து. அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் அருளை விரும்பி அறநெறியில் நின்றவன் பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான். நம் கனவுக்காவியமாம் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களில் எப்போதும் எனக்குள் பரிதாப உணர்வை ஏற்படுத்தும் மாபெரும் வீரர் - பதினாறாம் அகவை கூட நிறைவுறாத போதும் சேவூர் போரில் மாபெரும் சைனியத்தை வெற்றி கண்ட கோப்பரக் கேசரி ஆதித்த கரிகாலர்தான்.அவர் கோபத்தில் வெகுண்ட தருணம், சூழ்நிலையையும் தன்னிலையையும் மறந்த நேரம், என்னதான் போர் என்பது அக்கால வீர மரபுகளில் ஒன்றாகக் கருதப்பட்டாலும், ஆதரவற்ற ஓர் அபலை பெண்ணின் கண்ணீருக்கும் கதறலுக்கும் செவிசாய்க்காமல், உயிருள்ள ஓர் மனிதரை ‘எனது பொருள்’ எனச் சொந்தம் கொண்டாடிய அப்பெண்ணுக்கு முன்னே ஆதித்த கரிகாலன் செய்த ஒரே ஓர் செயல்தான் நம் பொன்னியின் செல்வன் புதினத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னேயும், ஒவ்வொரு நிகழ்வின் போதும் தொக்கி மறைந்து அச்சமூட்டி கொண்டே வரும். “வீரபாண்டியன் தலை கொண்ட” தருணத்தைத்தான் சொல்கிறேன்.ஆதித்த கரிகாலன் எனும் பெயரைக் கேட்டவுடனேயே என் இதயம் உருகும். மனம் கனமாகும். இத்தகையக் கொடுஞ்செயலை அவர் ஏன் செய்தார் என அந்த வீரத் திருமகனிடமே கேட்போம் வாருங்கள்... (தனது உயிர் நண்பர்களுள் ஒருவரான பார்த்திபேந்திரனிடம் ஆதித்த கரிகாலர்...) “மீனக் கொடியைப் பார்த்து நாம் ஏமாந்துபோனோம். மீனக் கொடியைத் தாங்கிக்கொண்டு யானை ஒன்று நின்றது. ஆனால் அதன் பேரிலோ, பக்கத்திலோ பாண்டிய மன்னனைக் காணவில்லை! வீரபாண்டியன் போர்க் களத்திலிருந்து தப்பி ஓடி ஒளிந்துகொள்ளுவதில் சமர்த்தன் அல்லவா? இப்போதும் அவன் ஓடியிருக்கலாம் என்று சந்தேகித்துப் படைகளைப் பிரித்து நாலா புறமும் அனுப்பினோம். "வைகை நதியின் இரு கரைகளோடு நீங்கள் எல்லோரும் விரைந்து சென்றீர்கள். நானும் சும்மா இருக்கவில்லை. வைகை நதியில் இறங்கி மணலில் நடந்து தெற்கே சென்றேன். ஒரு தனிக் குதிரையின் குளம்படி, மணலில் சில இடங்களில் பதிந்திருந்தது. குதிரை போன வழியில் மணலில் இரத்தக் கறையும் காணப்பட்டது. அதைப் பிடித்துக்கொண்டு நான் போனேன். வைகையாற்றின் மத்தியில் ஒரு தீவு போல் அமைந்திருந்த சோலையை அடைந்தேன். அந்தச் சோலைக்குள்ளே திருமாலின் கோயில் ஒன்றிருந்தது. அதையொட்டி இரண்டொரு அர்ச்சகர் வீடுகள் இருந்தன. பெருமாள் பூஜைக்குரிய பூ மரங்கள் அச்சோலையில் ஏராளமாக இருந்தன. ஒரு சிறிய தாமரைக் குளம் பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தது. "இப்படி நான் தீர்மானித்திருந்த நிலையில், ஒற்றைக் குதிரையின் குளம்படி அந்தச் சோலைக்குள்ளே போயிருப்பதைக் கண்டதும் அளவிலாத வியப்பும், ஆத்திரமும் கொண்டேன். மேலும் சென்று பார்த்தபோது, அடர்ந்த மரங்களின் மறைவில் குதிரை கட்டியிருப்பதைக் கண்டேன். எனவே, தப்பி வந்தவன் அந்தக் குடிசை வீடுகளில் ஒன்றில்தான் இருக்கவேண்டும். நந்தினியின் வீட்டுக்குச் சென்று பலகணி வழியாகப் பார்த்தேன். நண்பா! அங்கே நான் கண்ட காட்சி பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் என் நெஞ்சில் தீட்டியதுபோலப் பதிந்திருக்கிறது. ஒரு பழைய கயிற்றுக்கட்டிலில் வீரபாண்டியன் படுத்துக் கிடந்தான். நந்தினி அவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்துக் குடிக்கச் செய்தாள். அவள் முகம் முன் எப்போதுமில்லாத காந்தியுடன் ஜொலித்தது. அவள் கண்களில் இரண்டு துளிக் கண்ணீர் ததும்பி நின்றது. என்னை மீறி வந்த ஆத்திரத்துடன் கதவைப் படார் என்று உதைத்துத் திறந்துகொண்டு உள்ளே போனேன். காயங்களைக் கட்டிக்கொண்டிருந்த நந்தினி என்னைக் கண்டதும் அதை நிறுத்திவிட்டு முன்னால் வந்தாள். சாஷ்டாங்கமாக என்னை நமஸ்கரித்து எழுத்தாள். கைகூப்பிய வண்ணம் 'ஐயா! நீங்கள் என் பேரில் வைத்திருந்த அன்பின்மேல் ஆணையிட்டு வேண்டுகிறேன். இவரை ஒன்றும் செய்யாதீர்கள்! படுகாயப் பட்டுக் கிடக்கும் இவரை உங்கள் கையால் கொல்ல வேண்டாம்!” என்றாள். “நான் தட்டுத்தடுமாறி ‘உனக்கும் இந்த மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக இவன் உயிரைக் காப்பாற்றும்படி கேட்கிறாய்?' என்றேன். "இவர் என் காதலர்; இவர் என் தெய்வம்; இவர் என்னை மணந்துக் கொள்ளச் சம்மதித்திருக்கும் தயாளன்!" என்றாள்.. "காயம்பட்டிருந்த வீரபாண்டியனைப் பார்த்துக் கொஞ்சம் உண்டாகியிருந்த இரக்கமும் என்னிடமிருந்து அகன்றுவிட்டது. பாதகன், சண்டாளன், எப்படி என்னைப் பழி வாங்கிவிட்டான்! என் இராஜ்யத்தையே கைப்பற்றியிருந்தாலும் பாதகம் இல்லை. என் உள்ளத்தில் குடிக்கொண்டிருந்த பெண்ணரசியையல்லவா அபகரித்துவிட்டான்? இவனிடம் எப்படி இரக்கம் காட்ட முடியும்? முடியவே முடியாது! "நந்தினியை உதைத்துத் தள்ளிவிட்டு அவளைத் தாண்டிக்கொண்டு சென்று வாளின் ஒரே வீச்சில் வீர பாண்டியனுடைய தலையை வெட்டி வீழ்த்தினேன். அந்த மூர்க்க பயங்கரச் செயலை நினைத்துப் பார்த்தால் எனக்கு வெட்கமாயிருக்கிறது. ஆனால், அச்சமயம் யுத்த வெறியோடு கூடக் குரோத வெறியும் என்னைப் பிடித்திருந்தது. அந்த ஆவேசத்தில் பாண்டியனைக் கொன்றுவிட்டு அந்த வீட்டின் வாசற்படியை தாண்டும் போது நந்தினியை ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். அவளும் என்னைக் கண் கொட்டாமல் பார்த்தாள். அதைப் போன்ற பார்வை இந்தப் பூவுலகில் நான் கண்டதில்லை. அதில் காமக் குரோத லோப மோக மத மாற்சரியம் என்னும் ஆறு வித உணர்ச்சிகளும் அத்தனை நெருப்பு ஜுவாலைகளாகக் கொழுந்துவிட்டு எரிந்தன. அதன் பொருள் என்னவென்று எத்தனையோ தடவை எண்ணியெண்ணிப் பார்த்தும் எனக்கு இன்று வரை தெரியவில்லை! “அதற்குள் என்னைத் தேடிக்கொண்டு நீயும் இன்னும் பலரும் வந்து விட்டீர்கள் .வீரபாண்டியனுடைய தலையற்ற உடலையும் ரத்தம் சிந்திய தலையையும் பார்த்துவிட்டு எல்லோரும் ஜயகோஷம் செய்தீர்கள். ஆனால் என்னுடைய நெஞ்சில் விந்திய பர்வதத்தை வைத்ததுபோல் ஒரு பெரும் பாரம் அமுக்கிக் கொண்டிருந்தது!....” (பார்த்திபேந்திரனின் மறுமொழி) “இப்போது எனக்குக் கூட ஞாபகம் வருகிறது, அரசே! அந்தக் குடிசையின் வாசலில் தாங்கள் வீரபாண்டியன் உடலைத் தூக்கிக்கொண்டு வந்து போட்டீர்கள். நாங்கள் அனைவரும் வெறி கொண்டவர்களைப் போல் வெற்றி முழக்கம் செய்தோம். அதற்கு நடுவில் குடிசைக் குள்ளேயிருந்து விம்மல் சத்தம் ஒன்று வந்தது. ‘அது யார்?’ என்று நான் கேட்டேன். யாரோ அர்ச்சகர் குடும்பத்துப் பெண்கள். ஏற்கெனவே அவர்கள் பீதியடைந்து கதிகலங்கிப் போயிருக்கிறார்கள். நீங்கள் யாரும் உள்ளே போக வேண்டாம்!' என்றீர்கள். வெற்றி வெறியில் இருந்த நாங்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. உடனே எல்லாருமாக வீரபாண்டியனுடைய தலையை எடுத்துக் கொண்டு கிளம்பினோம். தாங்களும் எங்களுடன் வந்தீர்கள். ஆனால், எங்கள் களிப்பிலும் கொண்டாட்டத்திலும் அவ்வளவாகத் தாங்கள் கலந்து கொள்ளவில்லை. உற்சாகம் குன்றிக் காணப்பட்டீர்கள். நான் காரணம் கேட்டேன். தாங்கள் ஏதோ சமாதானம் சொன்னீர்கள். தங்களுக்கு ஏதேனும் பலமான காயம் பட்டிருக்குமோ என்று நான் சந்தேகித்துக் கேட்டதுகூட எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது!" என்றான் பார்த்திபேந்திரன். (ஆதித்த கரிகாலர் மறுமொழி) "என் உடம்பில் ஒன்றும் காயம் படவில்லை. பார்த்திபா! உள்ளத்தில் என்றும் ஆறாத காயம்பட்டுவிட்டது. வீரபாண்டியன் படுத்துக்கிடந்த கட்டிலுக்கு முன்னால் வந்து அவள் கைகூப்பி என்னிடம் உயிர்ப்பிச்சை கேட்ட காட்சி என் மனத்தை விட்டு அகலவில்லை. ‘ஐயோ! அவள் கேட்டதைக் கொடுக்காமல் போய் விட்டோமே!’ என்று என் மனம் பதைபதைத்தது. என் உயிரைக் கொடுப்பதின் மூலம் வீரபாண்டியனை உயிர்ப்பித்து அவளிடம் சேர்க்க முடியுமானால் அப்படியே நான் செய்திருப்பேன். இது முடியாதபடியால் என்னை நானே நொந்துகொண்டேன். என்னை நானே சபித்துக்கொண்டேன்.” (இப்பதிவின் ஆரம்பத்தில் நான் கூறியதுபோல நந்தினி சொந்தம் கொண்டாடியதை, அது பொருளாய் இருந்தால் என்ன? உறவாய் இருந்தால் என்ன! அப்படியே விட்டு விட்டு திரும்பிப்பார்க்காமல் போயிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என என் மனமும் அடிக்கடி வருந்தும். சில நேரங்களில் கன்னத்தில் கை வைத்தபடி ஓரிடத்தில் உட்கார்ந்துகொள்ளும்) "திடீர் என்று ஒரு நாள் ஆதித்தகரிகாலன் இறந்து விட்டான் என்றும், சம்புவரையரின் மாளிகையில் வஞ்சனையினால் கொல்லப்பட்டான் என்றும் செய்தி பரவவே, சோழநாட்டு மக்களின் உள்ளக் கிளர்ச்சி எப்படியிருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை அல்லவா? அந்த வீர புருஷனுக்கு இறுதி மரியாதை செய்வதற்கு லட்சக் கணக்கிலே திரண்டு வந்து சேர்ந்ததிலும் வியப்பில்லைதானே?.ஊர்வலம் தஞ்சையை அணுகியபோது, ஜனக்கூட்டம் ஜன சமுத்திரமாகவே ஆகிவிட்டது. தஞ்சை நகர மக்களும் தஞ்சைக் கோட்டையைச் சுற்றிலும் சூழ்ந்திருந்த தென் திசைப்படை வீரர்களும் கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து விட்டார்கள். அவர்களையெல்லாம் கோட்டைக்குள் அனுமதித்தால் பல விபரீதங்கள் நேரிடலாம் என்று முதன் மந்திரி அநிருத்தர் எச்சரித்ததின் பேரில், துயரக் கடலில் மூழ்கியிருந்த சக்கரவர்த்தியும் அவருடைய குடும்பத்தாரும் கோட்டைக்கு வெளியிலேயே வந்துவிட்டார்கள். சுந்தர சோழரைப் பார்த்ததும், அந்த மாபெரும் கூட்டத்தில் ஒரு பேரிரைச்சல் எழுந்தது. "சோழ நாட்டைச் சுந்தர சோழர் அரசு புரிந்தபோது 'ஹா' என்ற சத்தமே கேட்டதில்லை." என்று சிலா சாசனங்கள் சொல்லு கின்றன. ஆதித்த கரிகாலரின் மரணத்துக்கு முன்னால் குடிகொண்டிருந்த நிலைமை அச் சிலா சாசனங்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கோ “ஹா! ஹா!” “ஐயையோ!” என்ற சத்தங்கள் லட்சணக்கான குரல்களில் எழுந்தன. அபிமன்யுவைப் பறி கொடுத்த அர்ச்சுனனுடைய நினைவு அநேகருக்கு வந்தது.(தொடரத்தான் நினைக்கிறேன். இயலவில்லை... சற்றுப் பொறுங்கள் நண்பர்களே... மனதைச் சற்று ஆசுவாசப் படுத்திக்கொண்டு வந்து விடுகிறேன். அடுத்தப் பதிவில் சந்திப்போம்...)